திருச்செங்கோடு அடுத்த பட்லூர் காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு குளித்துக் கொண்டிருந்தனர் ஈரோட்டை சேர்ந்த தந்தை திருமூர்த்தி (40 ) மகன் கிருஷ்ணன் (9). அவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து திருச்செங்கோடு தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி இருவரையும் உயிருடன் மீட்டனர்!
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பட்லூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற ஈரோடு பழையபாளையம் பகுதியை சேர்ந்த தந்தை திருமூர்த்தி, மகன் கிருஷ்ணன் இருவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்!
இதனைக் கண்ட அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு வீரர் மோகன் இறையமங்கலம் பகுதியில் ரோந்தில் இருந்த தீயணைப்பு வாகனத்திற்கு தகவல் அளித்துவிட்டு ஆற்றில் கயிறு கூட இல்லாமல் நீந்திச் சென்றுள்ளார்!
அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த மோகன் ஆற்றில் இறங்கி இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் இருந்த போது மற்ற வீரர்களும் ஆற்றில் நீந்தி தந்தை மகன் இருவரையும் நீண்ட நேரம் போராடி உயிருடன் மீட்டு கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர்.
அனைவரையும் நெகிழ வைத்தது.!
– செய்தி: கே.சி.கந்தசாமி