அந்த வாலிபர் நேற்று வீட்டை விட்டு வெளியில் சென்றவர் பிறகு வீடு திரும்பி அவர் வந்தபோது குளியலறையில் பிங்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர், திருமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
இந்தநிலையில் பிங்கியின் வீட்டின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை காவல்துறை ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு பேர் பிங்கியின் வீட்டுக்குள் சென்றுவிட்டு பிறகு அவர்கள் புறப்பட்டுச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அவர்கள் யார் என்று காவல்துறை விசாரித்து வருகின்றனர். பிங்கியுடன் தங்கியிருந்த வாலிபரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
அவரது செல்போனுக்கு கடைசியாக பேசியவர்களின் விவரங்களைச் சேகரித்துள்ளோம். அதன்அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது. பிங்கியின் கொலை வழக்கில் முக்கிய தடயம் சிக்கியுள்ளது. மேலும், கொலையாளிகளையும் அடையாளம் கண்டுவிட்டோம். இதனால் கொலையாளிகளை விரைவில் கைது செய்து விடுவோம். கைதானவர்களிடம் விசாரித்த பிறகே கொலைக்கான காரணம் தெரியவரும்” என்றார்.