பிளஸ் 2 படிக்கும்போதே மாணவர்களுக்கு மடிக் கணினி: இந்த ஆண்டு முதல் அமல்

Published:

சென்னை:

மாணவர்களுக்கு அரசு வழங்கி வரும் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தில், இம்முறை பிளஸ் 2 படிக்கும் போதே வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

மாணவ மாணவியர் நலன் கருதி விலை இல்லா பாடப் புத்தகங்கள், விலை இல்லா நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், மடிக் கணினி உள்பட 14 வகை விலையில்லாப் பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உயர் கல்வி படிக்கும்போதுதான் மடிக்கணினி பயன்படுகிறது என்பதால், ஏராளமான ஏழை மாணவர்கள் பயன் அடைகிறார்கள். இந்த மடிக்கணினி பிளஸ் 2 முடித்த பிறகு, அவர்கள் உயர்கல்வியில் சேர்ந்த பிறகுதான் அந்தந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களால் வழங்கப்பட்டு வந்தது.

அந்த மடிக்கணினி முன்கூட்டியே கொடுக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன் காரணமாக பள்ளிக்கல்வித்துறை இந்த வருடம் முதல், மடிக்கணினியை மாணவ-மாணவிகளுக்கு வழங்கும் பணியை நேற்று தொடங்கியது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கூறுகையில் 2015-2016ம் ஆண்டு கல்வி ஆண்டுக்கு உரிய 5 லட்சத்து 8 ஆயிரத்து 72 மடிக்கணினிகள் கொடுக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்த வருடம் மடிக்கணினிகள் அனைத்தும் வந்துவிட்டன. எனவே உடனே கொடுக்கும் பணியை அந்தந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் செய்ய உள்ளனர் என்று தெரிவித்தார். எனவே மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டே பயன்படும். அவர்கள் உயர்கல்வியில் படிக்கும்போதும் பயன்பெறுவார்கள் என்றார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img