சென்னை:
சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக., சார்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதற்காக பாஜக தலைவர் டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மாநகராட்சி பின்வாசல் அமைந்துள்ள அல்லிக்குளம் பகுதியில் கூடி இருந்தனர். அவர்கள் மாநகராட்சியை கண்டித்து கோஷமிட்டனர்.
பின்னர் மாநகராட்சி அலுவலகம் நோக்கி முன்னேறிச் சென்ற போது அவர்களை போலீசார் தடுத்ததால் தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
பின்னர் மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து வேனில் ஏற்றினார்கள். தமிழிசை சௌந்தரராஜன் உள்பட 200-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கைது செய்யப் பட்டனர்.