சென்னையில் பாஜக., போராட்டம்: தமிழிசை சௌந்தரராஜன் உள்பட 200 பேர் கைது

Published:

images tamilnadu BJP protest in Chennai The arrest of 200 volunteers - 2026சென்னை:

சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக., சார்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதற்காக பாஜக தலைவர் டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மாநகராட்சி பின்வாசல் அமைந்துள்ள அல்லிக்குளம் பகுதியில் கூடி இருந்தனர். அவர்கள் மாநகராட்சியை கண்டித்து கோஷமிட்டனர்.

பின்னர் மாநகராட்சி அலுவலகம் நோக்கி முன்னேறிச் சென்ற போது அவர்களை போலீசார் தடுத்ததால் தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

பின்னர் மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து வேனில் ஏற்றினார்கள். தமிழிசை சௌந்தரராஜன் உள்பட 200-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கைது செய்யப் பட்டனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img