எம்.ஜி.ஆரின் 28 வது ஆண்டு நினைவு நாள்: நினைவிடத்தில் ஜெயலலிதா அஞ்சலி

சென்னை :

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர், எம்.ஜி.ஆரின் 28-வது ஆண்டு நினைவு நாளை யொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில்,.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, ,மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் தொடர்ந்து நல்லாட்சி அமைந்திட, தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெற முழு அர்ப்பணிப்போடு களப்பணியாற்றுவோம் என்பது உள்ளிட்ட 14 உறுதிமொழிகளை, அதிமுக நிர்வாகிகளும், பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் எடுத்துக் கொண்டனர்.

அதிமுக நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆர்., அமரர் ஆகிய நாள், 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதியாகும். அவரது, 28-வது ஆண்டு நினைவு நாளான நேற்று , சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான. ஜெயலலிதா நேற்று காலை 10 மணி அளவில் மலர்வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், அதிமுக பொருளாளரும்,நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் உறுதிமொழியை வாசிக்க, அங்கு கூடியிருந்த அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகளும், பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விரைவில் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெற்று, எம்.ஜி.ஆர். நல்லாசியோடு, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நல்லாட்சி அமைந்திட முழு அர்ப்பணிப்போடு களப்பணியாற்றுவோம் என்பது உள்ளிட்ட 14 உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன.

உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கழக அவைத் தலைவர் இ. மதுசூதனன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அமரர் எம்.ஜி.ஆருக்கு மரியாதை செலுத்தும் வகையில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் 2 மணித்துளிகள் மவுன அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன்,வைத்திலிங்கம், பழனியப்பன்,எடப்பாடி பழனிச்சாமி, வளர்மதி,கோகுலஇந்திரா, எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி, கே.டி.ராஜேந்திரபாலாஜி. ஆர்.பி. உதயகுமார், செல்லூர் கே.ராஜூ உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களும், எஸ்.ஆர்.விஜயகுமார், டி.ஜி.வெங்கடேஷ்பாபு, ஜெ.ஜெயவர்தன்,உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைப்புசெயலாளர் சி.பொன்னையன், அனைத்துலக எம்.,ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் அலெக்சாண்டர்.மகளிர்அணி செயலாளர் சசிகலாபுஷ்பா எம்.பி. , , அண்ணா தொழிற்சங்க செயலாளர் சின்னசாமி எம்.எல்.ஏ , வழக்கறிஞர் பிரிவு,செயலாளர் நவநீதக்கிருஷ்ணன், எம்.பி. , விவசாயப் பிரிவுச்செயலாளர் துரை. கோவிந்தராஜன், , மீனவர் பிரிவுத்தலைவர் கலைராஜ், மருத்துவ அணிசெயலாளர் வேணுகோபால் எம்.பி., அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி,செயலாளர் கமலக்கண்ணன் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் பி.குமார். எம்.பி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் சாமிநாதன் உள்ளிட்ட அதிமுக பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

மேலும் தமிழக சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், மேயர் சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், செந்தில் பாலாஜி, அரசு கொறடா மனோகரன், அரசு கேபிள் டி.வி. வாரிய தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஜி.செந்தமிழன் எம்.எல்.எ., கே.எஸ்.சீனிவாசன், பி.வெற்றிவேல், சத்யா, சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பி.கலைராஜன், கே.பி.கந்தன், கே.குப்பன், கடம்பூர் ராஜு, கோபாலசாமி, சமூகநல வாரிய தலைவர் சி.ஆர்.சரஸ்வதி, முன்னாள் மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா, நடிகர் ஜெயகோவிந்தன், வடசென்னை தெற்கு மாவட்ட துணை செயலாளர் ஆர்.எம்.டி.ரவீந்திர ஜெயன், மாவட்ட கழக பொருளாளர் வி.கிரிநாத், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் எம்.இஸ்மாயில்கனி, பெரும்பாக்கம் ராஜசேகர், பகுதி செயலாளர்கள் எம்.கே.அசோக் எம்.எல்.ஏ., நுங்கை மாறன், வி.கே.பாபு, ஜெயச்சந்திரன், ஏழுமலை, அபிராமி பாலாஜி, கொளத்தூர் கணேஷ், மாநகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவர் ஆ.பழனி, மாமன்ற உறுப்பினர்கள் பி.சின்னையன் ,டி.சிவராஜ், புஷ்பாநகர் ஆறுமுகம், , பி.சந்தானகிருஷ்ணன், வீடியோ சரவணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் சரஸ்வதி ரங்கசாமி, வேளாங்கண்ணி என்ற கஸ்தூரி, அஞ்சுலட்சுமி, வத்சலா, மாவட்ட தொழிற்சங்க பொருளாளர் இ.எஸ்.சதீஷ்பாபு, இணை செயலாளர் சத்திய நாராயணன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஏ.ஏ.அர்ஜுனன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் பி.குணராஜ், மாவட்ட பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், பி.இளையமாறன், என்.சேதுராஜன்,பேராசிரியர் பிரபாகரன், ஆனைக்குட்டி ஆனந்தன், பிரிதிவிராஜன், திருச்சி மாநகராட்சி துணை மேயரும், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான ஜெ.சீனிவாசன், டி.யூ.சி.எஸ். பி.சீனிவாசன், சைதை ஜி.சாரதி, லயன் வீராசாமி, ராமமுருகன், மயிலை ராஜேஷ்கண்ணா, தி.நகர் ஆறுமுகம் உட்பட ஏராளமானபேர் கலந்து கொண்டனர். மாநகர போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.எஸ்.அஸ்லாம் தலைமையில் ஏராளமான போக்குவரத்து ஊழியர்கள் சீருடையுடன் கொடி ஏந்தி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி முடிந்து அங்குள்ள கூட்டம் வெளியே செல்ல பல மணிநேரம் பிடித்தது. அந்த அளவுக்கு அங்கு கடல் அலையென மக்களும், தொண்டர்களும் திரண்டிருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories