உன்மத்தன் வம்பு

உன்மத்தன் வம்பு!

kamal function - 2026

கமால் பாஷா ஞானம்
டமால் என்றே வெடித்தது
தமிழ் நாட்டின் மானம்
தடால் என்றே கவிழ்ந்தது.

கற்பனைக் கதையிது,
விற்பனைக் கல்ல!
எச்சரிக்கை எச்சரிக்கை!

சொற்போர் எனல் வேண்டாம்
கற்போரே உமக்கு மட்டும்!
எச்சரிக்கை எச்சரிக்கை!

காலை வெளிச்சத்தில்
உதித்த கவிதையிது…
மாலை மயக்கத்தில்
மரித்த மனிதமிலை!

தவமிருந்து பெற்றபிள்ளை
தறுதலையாய் போகுதென்றால்
தாய் இருந்த தவத்தினிலே
தவறெதுவும் இல்லையடா

வரும்லட்சுமி என்றே வசனம்பேசி
வலிந்து அழைப்பான்
வந்தபின்னே வாசல் வழிதிறந்து
ஊர்மேயப் போவான்
வா நீ வா நீ என்றே
வருந்தி அழைப்பான்
வந்தவள் வாசம்கண்டபின்
போ நீ போ நீ என்றே
துரத்தி அடிப்பான்
எச்சரிக்கை எச்சரிக்கை

மஞ்சத்தில் சாய்ந்தவளின்
கெஞ்சல் மொழி கேட்பான்
சரி சரி என்றே தலைசாய்ப்பான்
சரிவு கண்டால்
கா எனச் சொல்லி
கழற்றிடுவான் எச்சரிக்கை!

பாத்திரமோ இருள் வேடம்
பாத்திறமோ பகல் வேடம்
சத்தியமாய் பேசும்மனம்
சத்தியமாய் இல்லையென
நித்தியமாய் கண்டுவிடு
எச்சரிக்கை எச்சரிக்கை

பத்தியமாய் அவருமில்லை
பைத்தியமாய் நாமுமில்லை
வைத்தியமே தேவையடா
வையத்தை வாழ்விக்க!

சத்திரத்துச் சரக்கொன்றை
வித்துவிடத் துடிக்கின்றார்
பத்திரமாய் உம்மனத்தை
வைத்திருங்கள் எச்சரிக்கை!

கத்திக்கத்திக் கதைத்தாலும்
காத்தாமுட்டி கேட்குதில்லை
சொத்துசுகம் எல்லாமும்
சொர்க்கத்தைத் தந்திடுமோ?
எச்சரிக்கை எச்சரிக்கை!

பாப்பான் கேட்பான் என்றே பயத்தால்
விப்பான் விம்முவான்
எச்சரிக்கை எச்சரிக்கை

கறுப்புச் சட்டத்துள் தானாய் நுழைந்து
வெறுப்புச் சாட்டையால் தாயைப் பழிப்பான்
எச்சரிக்கை எச்சரிக்கை!

கறுப்புக்குள்ளே புகுந்ததாய் எண்ணி
வெளுப்பைத் தொலைத்த வீரன்வரான்
எச்சரிக்கை எச்சரிக்கை!

அந்தி வந்த பின்னே
முந்தி மட்டும் தேடும்
சிந்தை தொலைந்த சிறுவன்
வாந்தி எடுத்ததெல்லாம்
சொந்த வார்த்தையல்ல;
நொந்த மனிதன் காட்சி!
ஓய்ந்த மனதின் சாட்சி!

எச்சரிக்கை எச்சரிக்கை
எச்சரிக்கை எச்சரிக்கை!

4 COMMENTS

  1. வாஞ்சிநாதன் ஊர்காரராச்சே ! இந்த ஆஷ் துறைக்கு இது போதும் ! கவிதை சூப்பர் !

  2. கவிதை முப்போகம் விளையட்டும்…

  3. வாஞ்சிநாதன் ஊர்காரராச்சே ! இந்த ஆஷ் துறைக்கு இது போதும் ! கவிதை சூப்பர் !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

Entertainment News

Popular Categories