தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

kadeswara subramaniam hindu munnani - 2026

தோல்வி பயத்தால், தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி செய்வதை தேர்தல் ஆணையம் கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.. என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது…

பாராளுமன்ற தொகுதி வரன்முறை பற்றிய மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வதில் என்ன இருக்கப்போகிறது? கற்பனையில் வன்முறையை தூண்டி திமுக மிரட்டல் விடுப்பது ஜனநாயக விரோதம். பாராளுமன்றத்தில் திமுக கூட்டணியில்தமிழகத்தை சேர்ந்த 39 எம்பிக்கள் இருக்கும் போது, பாராளுமன்றத்தில் பேசுவதை விட்டுவிட்டு பொது இடத்தில் மசோதா நகலை எரிப்பது என்ற அநாகரீகமான செயலை மாநிலத்தின் பொறுப்பு முதல்வராக இருக்கும் ஸ்டாலின் அவர்கள் செய்வது சட்டவிரோதச் செயல் ஆகும்.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் சட்ட நகலை அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் திமுகவின் தலைவரான கருணாநிதி அவர்கள் எரித்தபோது வழக்கை சந்திக்க வேண்டி வந்தது. அப்போது கருணாநிதி நாங்கள் சட்ட நகலை எரிக்க வில்லை என்று நீதிமன்றத்தில் கூறி தப்பினார்.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

இப்போதும் மசோதா நகலை எரித்தார்களா? இல்லையா? என்பது ஒருபுறம். பாராளுமன்ற நடைமுறையை அவமதிப்பது சட்ட விரோதம் ஆகும். அதுவும் அரசியல் சாசன சட்டத்தை மதிக்க உறுதிமொழி எடுத்தவர் அதனை அவமதிப்பவர்கள் மீது மத்திய அரசு உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் நடைமுறையை அமல்படுத்தும் தேர்தல் ஆணையம் திமுக தலைவரின் வன்முறையை தூண்டும் பேச்சுக்களை, அறிக்கைகளை கண்டுகொள்ளாமல் இருப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

காவல்துறை மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் இன்னமும் திமுகவை ஆளுங்கட்சியாகவே கருதுகிறார்களா? தமிழகத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டு தேர்தலை தள்ளி வைக்க சதி நடக்கிறதா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுகிறது.

சாதாரணமாக நிகழ்ச்சி நடத்த 48 மணிநேரம் முன்னதாக தேர்தல் ஆணையத்திடம் ஆன்லைனில் மனு அளித்து அனுமதி வாங்க வேண்டும் என்ற நிலையில், நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்து இன்று ஆர்ப்பாட்டம் செய்வது தேர்தல் அதிகாரிகளின் உள்ளடி வேலையா?

பாராளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு புதியது இல்லை. எப்படி மாநில அரசு மாவட்டங்களை பிரிக்கிறதோ அதுபோல இதனை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தியே வந்துள்ளது.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

திமுக, மத்திய அரசின் கூட்டணியில் இருந்த போதே தமிழகத்தில் 41 எம்.பி.க்கள் என்பது 39 எம்பி ஆனது. அப்போது மௌனமாக ஏற்றுக்கொண்டது திமுக.

ஆனால் தற்போது அவ்வாறு இல்லாமல் சம அளவிலான எம்பிக்களின் எண்ணிக்கையை உயர்த்தி, அதன் பலனாக பெண்களுக்கான ஒதுக்கீடு 33% தருவதற்கு வழிவகை காண்பதாக இம்மசோதாவில் கூறப்படுகிறது.

அதன் முழு வடிவமான மசோதா இன்று தான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிலையில், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கற்பனையான பதற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்துவது, தேர்தல் தோல்வி பயமே காரணம் ஆகும்.

இந்து விரோத திமுகவின் தேச விரோத செயலுக்கு தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைக்கப்போகும் தேர்தல் இது. திமுக வன்முறையை தூண்டி, தற்கொலை நாடகங்களை நடத்தி தேர்தலை சீர்குலைக்க நடக்கும் நாடகத்தை தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை மூலம் தடுத்து நிறுத்த வேண்டும்.

இது குறித்து தேர்தல் ஆணையரிடம் இந்து வழக்கறிஞர்கள் முன்னணி சார்பில் புகார் மனு நேரடியாக அளிப்பார்கள்.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதியை நிலைநாட்ட இந்து முன்னணி முயற்சி செய்யும்.

எனவே பொது மக்கள் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பரப்பும் பொய்யை நம்ப வேண்டாம்.

பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

Entertainment News

Popular Categories