இந்திய உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக இன்று வழக்கு விசாரணை ராட்சஷ திரை மூலம் நேரடி ஒளிபரப்பு

 

தமிழகம் முழுவதும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியவேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக மதுரை வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தலைமை தாங்கிய மதுரை வக்கீல் சங்கத்தின் தலைவர் தர்மராஜ், செயலாளர் ராமசாமி மீது சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக மதுரை வக்கீல்கள் போராட்டம் நடத்தினார்கள்.

மேலும், சென்னை உயர் நீதிமன்றதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வரும்போது, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர்கள் பிரச்சினை செய்யலாம் என்று தகவல் வெளியானது. இதையடுத்து கடந்த முறையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்கப்படும் நீதிமன்ற அறைக்குள், வழக்கு தொடர்பானவர்களை தவிர வேறு யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பொன்.கலையரசனுக்கு, நீதிபதிகள் தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர் உத்தரவிட்டார்கள்.

இதையடுத்து, வழக்கு விசாரணை நடந்த நீதிமன்ற அறையை சுற்றி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வழக்கில் தொடர்பில்லாத வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களும் நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கவில்லை.

ஆனால், உளவுப்பிரிவு போலீசாரை மட்டும் நீதிமன்ற அறைக்குள், பாதுகாப்பில் நின்ற போலீசார் அனுமதித்தார்கள். இதையடுத்து கோர்ட்டு அறைக்குள் அனுமதிக்காத வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த நிலையில், வழக்கறிஞர்கள் அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் தமிழ்வாணன், செல்வம் ஆகியோர் முன்பு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.

நீதிபதிகளின் உத்தரவின் படி, இந்த முறையும் வழக்கு விசாரிக்கப்படும் நீதிமன்ற அறைக்குள், வழக்கில் தொடர்பு உள்ளவர்களை தவிர வேறு யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று உயர் நீதிமன்ற நிர்வாகம் கூறியுள்ளது. அதேநேரம், நீதிமன்ற அறைக்குள் என்ன நடக்கிறது? என்பதை வெளியில் இருந்து பார்க்க ராட்சஷ திரைகள் அமைத்து, நேரடி ஒளிப்பரப்பு செய்யவும் நீதிமன்ற நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற1862ம் ஆண்டு கட்டப்பட்டது. இதுநாள் வரை, வழக்கு விசாரணையை ராட்சஷ திரை அமைத்து, நேரடி ஒளிபரப்பியது கிடையாது. ஐகோர்ட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக இன்று பிற்பகலில் வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மேலும், இந்த வழக்கு விசாரணையை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் போலீஸ் கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் இந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

Topics

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Entertainment News

Popular Categories