PARIS MANICKA VINAYAGAR TEMPLE CAR FESTIVAL
பிறந்த பொன்னாடும் பிறந்த மதமும் கலாசாரமும் என்றென்றும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்கின்ற கொள்கை உடைய உண்மைத் தமிழர் உலகமெலாம் பரந்திருக்கின்றனர். அவர்களின் கொள்கைகளை இன்றளவும் காத்துவருவதை இந்த விழாவின் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். குறிஞ்சிக்கு முருகனும் முல்லைக்கு மாலவனும் தெய்வங்களாக பழங்காலத் தமிழனின் பார்வையிலிருந்து இன்றுவரை வந்துகொண்டிருக்கிறது.
பிரான்ஸின் பாரீஸ் நகரில் வீற்றிருக்கும் ஸ்ரீமாணிக்க விநாயகர் கோயிலில் தர்மகர்த்தாவாக இருந்து கோயிலை நல்ல முறையில் பரிபாலித்துவரும் திரு. சந்திரசேகரம் குழுவினரின் முயற்சியில் இந்த வருடமும் தேர்த்திருவிழா நல்ல முறையில் நடந்து முடிந்தது. பாரீஸ் நகரின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது கருதப்படுகிறது. இந்தத் தேர் பவனியை பல செய்தி ஊடகங்கள் அங்கே வெளிப்படுத்தியுள்ளன. தமிழர் கலாசார நிகழ்வாகத் திகழும் இந்த நிகழ்வுக்கு பாரீஸ் மற்றும் பிரான்ஸின் இந்துக்கள் மட்டுமல்லாது அண்டை நாட்டு இந்துக்கள் அல்லாதோரும் இந்துக் கலாசார நிகழ்வாகிய இந்த தேர் பவனியில் காவடி எடுத்து உற்சாகமாகக் கலந்து கொள்கின்றனர்.
இந்த வருடம் செப். 2இல் இந்த 12வது தேர்பவனி விழா நடந்தது, இந்த நிகழ்வில் இலங்கை இந்திய தூதரகத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். வழக்கம் போல் வீதியில் வர்த்தகர்களும் பக்தர்களும் கூடி, வீதியை சுத்தம் செய்து, மாவிலை தோரணம் கட்டி அலங்கரித்து, வந்த பக்தர்களுக்கு சிற்றுண்டி கொடுத்து சிறப்பித்தனர்.
தேர்பவனியின் போது, பல ஆயிரக்கணக்கான தேங்காய்கள் சிதறி அடிக்கப்பட்டதை, அதாவது விடல் போடப்பட்டதை வேற்றுநாட்டவர்கள் ஆச்சரியமுடனும் ஆர்வத்துடனும் கண்டு ரசித்தனர். பகல் 11 மணியில் இருந்து, பிற்பகல் 3மணி வரை பாரீஸின் குறிபிட்ட பிரதான வீதிகள் வழியாக பேருந்து போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. மேளதாளங்கள், காவடிகள், கற்பூரச் சட்டிகள் என பக்தர்களின் கூட்டம் அலைமோத விநாயகப் பெருமான் பாரீஸின் நகர வீதிகளில் தேரில் அமர்ந்துகொண்டு பவனி வந்தார்.
PARIS MANICKA VINAYAGAR TEMPLE CAR FESTIVAL
பிறந்த பொன்னாடும் பிறந்த மதமும் கலாசாரமும் என்றென்றும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்கின்ற கொள்கை உடைய உண்மைத் தமிழர் உலகமெலாம் பரந்திருக்கின்றனர். அவர்களின் கொள்கைகளை இன்றளவும் காத்துவருவதை இந்த விழாவின் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். குறிஞ்சிக்கு முருகனும் முல்லைக்கு மாலவனும் தெய்வங்களாக பழங்காலத் தமிழனின் பார்வையிலிருந்து இன்றுவரை வந்துகொண்டிருக்கிறது.
பிரான்ஸின் பாரீஸ் நகரில் வீற்றிருக்கும் ஸ்ரீமாணிக்க விநாயகர் கோயிலில் தர்மகர்த்தாவாக இருந்து கோயிலை நல்ல முறையில் பரிபாலித்துவரும் திரு. சந்திரசேகரம் குழுவினரின் முயற்சியில் இந்த வருடமும் தேர்த்திருவிழா நல்ல முறையில் நடந்து முடிந்தது. பாரீஸ் நகரின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது கருதப்படுகிறது. இந்தத் தேர் பவனியை பல செய்தி ஊடகங்கள் அங்கே வெளிப்படுத்தியுள்ளன. தமிழர் கலாசார நிகழ்வாகத் திகழும் இந்த நிகழ்வுக்கு பாரீஸ் மற்றும் பிரான்ஸின் இந்துக்கள் மட்டுமல்லாது அண்டை நாட்டு இந்துக்கள் அல்லாதோரும் இந்துக் கலாசார நிகழ்வாகிய இந்த தேர் பவனியில் காவடி எடுத்து உற்சாகமாகக் கலந்து கொள்கின்றனர்.
இந்த வருடம் செப். 2இல் இந்த 12வது தேர்பவனி விழா நடந்தது, இந்த நிகழ்வில் இலங்கை இந்திய தூதரகத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். வழக்கம் போல் வீதியில் வர்த்தகர்களும் பக்தர்களும் கூடி, வீதியை சுத்தம் செய்து, மாவிலை தோரணம் கட்டி அலங்கரித்து, வந்த பக்தர்களுக்கு சிற்றுண்டி கொடுத்து சிறப்பித்தனர்.
தேர்பவனியின் போது, பல ஆயிரக்கணக்கான தேங்காய்கள் சிதறி அடிக்கப்பட்டதை, அதாவது விடல் போடப்பட்டதை வேற்றுநாட்டவர்கள் ஆச்சரியமுடனும் ஆர்வத்துடனும் கண்டு ரசித்தனர். பகல் 11 மணியில் இருந்து, பிற்பகல் 3மணி வரை பாரீஸின் குறிபிட்ட பிரதான வீதிகள் வழியாக பேருந்து போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. மேளதாளங்கள், காவடிகள், கற்பூரச் சட்டிகள் என பக்தர்களின் கூட்டம் அலைமோத விநாயகப் பெருமான் பாரீஸின் நகர வீதிகளில் தேரில் அமர்ந்துகொண்டு பவனி வந்தார்.
S.G.Kittappa’s contributed Library
S.G.Kittappa’s contributed Library
ThirumalaiKoil-திருமலைக்கோயில் முருகன் படங்களுடன்…
தமிழுக்கு இலக்கணம் வகுத்த குறுமுனி அகத்தியர் இந்தக் கோயிலுக்கு வந்து முருகனை வழிபட்ட செய்திகள் உண்டு. பொதிகை மலையில் வாழ்ந்து வந்த அகத்தியர் திருமலைக்கு வந்து முருகனை வணங்கி வந்தார். முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காக அழகிய பூஞ்சுனை ஒன்றையும் அமைத்தார். அதில் சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் பெயர்களில் மூன்று குழிகளை ஏற்படுத்தினார். அவற்றில் எப்போதும் நீர் நிறைந்தே இருக்கும். எப்போதாவது இக்குழிகளில் நீர் குறைந்தால், உடனே மழை பொழிந்து இந்தக் குழிகளை நிரப்பி விடும் என்பது இந்தத் தலத்து வரலாறு.
இந்தச் சுனைக்கு அஷ்ட பத்மக் குளம் என்று பெயர் ஏற்பட்டது. இதில் நீராடி, முருகனை வழிபட்டு வந்தால், நோய்நொடி நீங்கி நீண்ட நாட்கள் வாழலாம் என்பது நம்பிக்கை. இந்தச் சுனையில் நாள்தோறும் குவளைப் பூ ஒன்று பூக்குமாம். அதை சப்தகன்னியர் எடுத்து ஆதி உத்தண்ட நிலைய முருகப் பெருமானை வழிபட்டு வந்தார்களாம். இந்த முருகன் சன்னிதியில் ஏழுகன்னிமார்களுக்கும் சன்னதியிருப்பது ஆச்சர்யமான ஒன்று.
முருகபக்தர்களாகத் திகழ்ந்த பல கவிகளும் பெரியவர்களும் இந்தத் தலத்துக்கு வந்து முருகனைப் பாடி அருள் பெற்றுள்ளார்கள்.
பிறகு திருமலைக்காளி சன்னிதி சென்று காளிதேவியை வணங்கி திருமலைக் குமாரனின் சன்னிதிக்குள் சென்றால் அங்கே அழகிய பாண்டி நாட்டு கட்டடக் கலையில் அமைந்த அழகான தூண்கள் அமைந்த மண்டபத்தையும் முருகன் சன்னிதியையும் தரிசிக்கலாம். உற்சவ மூர்த்தியும் அறுமுகப் பெருமானும் ஒய்யாரமாகக் காட்சி தருகிறார்கள்.
இந்தத் தலத்தில் எல்லாத் தலத்துக்கும் உரிய சன்னிதிகள் இருந்தாலும், மிகவும் சிறப்பாகத் திகழ்வது, கபால பைரவர் சன்னிதி. இந்த சன்னிதியில் ஐந்தரை அடி உயரத்தில் மிகப் பிரமாண்டமாக பைரவர் அழகாகக் காட்சி தருகிறார். இந்த பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வடைமாலை சாற்றி வழிபட்டுவந்தால், நோய் நொடி, பில்லி சூனியம் போன்ற எதிர்மறை விஷயங்கள் நம்மை விட்டு விலகும். தொழில் அபிவிருத்தி அடைந்து இல்லத்தில் மகிழ்ச்சியும் இல்வாழ்க்கை சிறப்பாக அமைவதையும் பக்தர்கள் பலரின் வாழ்வில் இன்றும் கண்கூடாகக் காணலாம்.
– கட்டுரை மற்றும் படங்கள் : செங்கோட்டை ஸ்ரீராம் Senkottai Sriram
ThirumalaiKoil-திருமலைக்கோயில் முருகன் படங்களுடன்…
தமிழுக்கு இலக்கணம் வகுத்த குறுமுனி அகத்தியர் இந்தக் கோயிலுக்கு வந்து முருகனை வழிபட்ட செய்திகள் உண்டு. பொதிகை மலையில் வாழ்ந்து வந்த அகத்தியர் திருமலைக்கு வந்து முருகனை வணங்கி வந்தார். முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காக அழகிய பூஞ்சுனை ஒன்றையும் அமைத்தார். அதில் சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் பெயர்களில் மூன்று குழிகளை ஏற்படுத்தினார். அவற்றில் எப்போதும் நீர் நிறைந்தே இருக்கும். எப்போதாவது இக்குழிகளில் நீர் குறைந்தால், உடனே மழை பொழிந்து இந்தக் குழிகளை நிரப்பி விடும் என்பது இந்தத் தலத்து வரலாறு.
இந்தச் சுனைக்கு அஷ்ட பத்மக் குளம் என்று பெயர் ஏற்பட்டது. இதில் நீராடி, முருகனை வழிபட்டு வந்தால், நோய்நொடி நீங்கி நீண்ட நாட்கள் வாழலாம் என்பது நம்பிக்கை. இந்தச் சுனையில் நாள்தோறும் குவளைப் பூ ஒன்று பூக்குமாம். அதை சப்தகன்னியர் எடுத்து ஆதி உத்தண்ட நிலைய முருகப் பெருமானை வழிபட்டு வந்தார்களாம். இந்த முருகன் சன்னிதியில் ஏழுகன்னிமார்களுக்கும் சன்னதியிருப்பது ஆச்சர்யமான ஒன்று.
முருகபக்தர்களாகத் திகழ்ந்த பல கவிகளும் பெரியவர்களும் இந்தத் தலத்துக்கு வந்து முருகனைப் பாடி அருள் பெற்றுள்ளார்கள்.
பிறகு திருமலைக்காளி சன்னிதி சென்று காளிதேவியை வணங்கி திருமலைக் குமாரனின் சன்னிதிக்குள் சென்றால் அங்கே அழகிய பாண்டி நாட்டு கட்டடக் கலையில் அமைந்த அழகான தூண்கள் அமைந்த மண்டபத்தையும் முருகன் சன்னிதியையும் தரிசிக்கலாம். உற்சவ மூர்த்தியும் அறுமுகப் பெருமானும் ஒய்யாரமாகக் காட்சி தருகிறார்கள்.
இந்தத் தலத்தில் எல்லாத் தலத்துக்கும் உரிய சன்னிதிகள் இருந்தாலும், மிகவும் சிறப்பாகத் திகழ்வது, கபால பைரவர் சன்னிதி. இந்த சன்னிதியில் ஐந்தரை அடி உயரத்தில் மிகப் பிரமாண்டமாக பைரவர் அழகாகக் காட்சி தருகிறார். இந்த பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வடைமாலை சாற்றி வழிபட்டுவந்தால், நோய் நொடி, பில்லி சூனியம் போன்ற எதிர்மறை விஷயங்கள் நம்மை விட்டு விலகும். தொழில் அபிவிருத்தி அடைந்து இல்லத்தில் மகிழ்ச்சியும் இல்வாழ்க்கை சிறப்பாக அமைவதையும் பக்தர்கள் பலரின் வாழ்வில் இன்றும் கண்கூடாகக் காணலாம்.
– கட்டுரை மற்றும் படங்கள் : செங்கோட்டை ஸ்ரீராம் Senkottai Sriram