ஸ்ரிக்ட் ஆஃபீசர். ஆனால் குடும்ப மனிதர்- சஜ்ஜனார் குடும்பம் கூறிய தகவல். திசா வழக்கில் குற்றவாளிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் நாடு முழுவதும் பாராட்டு கிடைத்துள்ளது.
பல நகரங்களில் பெண்கள் இனிப்பைப் பகிர்ந்தும் டான்ஸ் ஆடியும் கொண்டாடி வருகிறார்கள் . தெலங்காணா போலீசார் மீது பாராட்டு மழை பொழிந்து வருகிறார்கள்.
“ஸாஹோ சஜ்ஜனார்!” என்று ஜே ஜே கோஷமிடுகிறார்கள். கர்நாடகாவில் ஹூப்ளியில் சிபி சஜ்ஜனார் சொந்த ஊரில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஹூப்ளியில் வசிக்கும் சஜ்ஜனாரின் சகோதரர் பிரகாஷ் சஜ்ஜனாரின் குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை டிசம்பர்-6 காலை செய்தியாளர்களோடு பேசினர். சஜ்ஜனார் பற்றிய சுவையான விவரங்களை தெரிவித்தனர்.
மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆபீசர் என்றும் மிகவும் டிசிப்ளினாக இருப்பார் என்றும் அண்ணி வினுதா சஜ்ஜனார் கூறினார்.
அவர் எப்போதும் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று சிரமம் எடுத்துக்கொள்வார். ஆனால் எல்லோரையும் போலவே அவரும் குடும்ப மனிதரே என்றார்.
ஹூப்ளியில் சஜ்ஜனாருக்கு நண்பர்கள் பலர் உள்ளனர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வந்து மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவார் என்று வினுதா கூறினார் .
ஹூப்ளியில் டைம் செலவழிப்பது அவருக்கு மிகவும் பிடிக்கும். சரஜ்ஜனாரிடம் தலைமை குணங்கள் நிறைய உண்டு என்றார்.
இந்த என்கவுன்டர் பெண்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் மானபங்க சம்பவங்கள் நேர்ந்தால் பலன் என்னவாக இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். திசாவுக்கு நியாயம் கிடைத்து விட்டது. அந்த தீயோர் ஏதோ ஒரு நாள் வெளியே வந்து விடுவார்களோ என்று நேற்றுவரை தோன்றிக்கொண்டே இருந்தது. இன்று அவர்களுக்கு தண்டனை கிடைத்தது என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நாடெங்கிலும் பெண்கள் போலிசாருக்கு ராக்கி கட்டி ஸ்வீட் பகிர்ந்து வருகிறார்கள். ஹூப்ளியில் சஜ்ஜனார் இல்லத்திற்கு உறவினர்களும் உள்ளூர் வாசிகளும் பெரிய அளவில் வந்து குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
1996 பேட்சைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி விஸ்வநாதன் சஜ்ஜனார் கர்நாடகா கதக் மாவட்டம் அசுதி கிராமத்தில் பிறந்தார். அசுதி கிராமம் தற்போது விழாக்கோலம் பூண்டுள்ளது.
” என் சகோதரர் பணியின் மீது கடமை உணர்ச்சியும் நேர்மையும் கொண்ட மனிதர் .அவரிடம் தலைமைப் பண்புகள் நிரம்பி உள்ளன. இந்த நிகழ்வால் நாடு முழுவதும் கர்வம் கொள்கிறது. நாட்டின் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கு கொள்கிறோம்” என்றார் சகோதரர் பிரகாஷ் சஜ்ஜனார்.