தியானத்தில் அமர்ந்த குரங்கும் அன்பர்களை ஆசீர்வதித்த குரங்கும்!

monkey asirwad1 - 2026

அகல்கோட்டில் உள்ளது அவதூத சம்பிரதாயத்தைச் சேர்ந்த சமர்த்த அகல்கோட் ஸ்வாமியின் சமாதிக் கோயில். 3 நாட்களுக்கு முன்னர், இங்கே பக்தர்களோடு பக்தராக, ஒரு குரங்கும் உள்ளே வந்தது.

பக்தர்கள் மண்டபத்தில் கீழே அமர்ந்து தியானித்தும் பஜன் பாடல்கள் பாடிக்கொண்டும் இருக்க, இந்தக் குரங்கோ அமைதியாக மண்டபத்தில் மேல் ஒரு தூணுக்கு அடியில் அமர்ந்து கொண்டது. ஆலயத்துக்கு வந்த ஸ்வாமியின் பக்தர்கள் ஆச்சரியப்பட்டனர்.
எல்லோரும் நாமஸ்மரணத்தில் இருக்க இந்தக் குரங்கோ கண்களை மூடி தியானத்தில் சுமார் பத்து நிமிடங்கள் அமர்ந்தது. குனிந்த தலையுடன், இரு கைகளையும் தன் இரு கால்களில் பிடித்தவாறே ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்ததைக் கண்டு அங்கு வந்த பக்தர்கள் ஆச்சரியப் பட்டனர். ஒரு சிலர் அந்தக் குரங்கை இறைவனின் அம்சமாகவே கருதி வணங்கினர்.

ராமாயணத்தில் வானரங்கள் மிகவும் புகழ்பெற்றவை. ஸ்ரீராமபிரானுக்கு உதவவே பிறந்தவைகளாக அவற்றை ராமனின் பக்தர்கள் கருதுகின்றனர். இன்றும் அனுமன் ஆலயங்கள் இந்தியா முழுக்க மட்டுமல்லாமல் இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் பரவிக் கிடக்கின்றன. ராமாயணக் கதை கேட்கும் இடங்களில் அனுமன் வந்து அமர்வார் என்ற நம்பிக்கை நம் நாட்டில் நிலவுகிறது. சில இடங்களில் அப்படிக் கதைகள் சொல்லப்படும் போது, குரங்கு ஏதேனும் ஒன்று வந்து ஆடாமல் அசையாமல் அதைக் கேட்டுச் செல்வதும் உண்டு. பக்தர்கள் அந்தக் குரங்குக்கு வாழைப்பழம் கொடுத்து ஆசி பெறுவதும் உண்டு.

இப்படித்தான் ஒரு குரங்கு, எங்கோ ஓர் இடத்தில் தியானத்தில் அமர்ந்துவிட்டு, பக்தர்களுக்கு ஆசி கொடுக்க அமர்ந்துவிட்டது. தன்னிடம் வந்து தலையைக் குனிந்து ஆசி வேண்டும் அன்பர்களின் தலையைத் தடவிக் கொடுத்து, ஆசி அளிக்கிறது அந்தக் குரங்கு. இந்த இரு வீடியோக்களும் இப்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன. அகல்கோட் மந்திருக்கு வந்த குரங்கு, தியானத்தில் அமர்ந்துவிட்டு, பின் அனைவருக்கும் ஆசி அளிக்கிறது என்று ஒரு செய்தி பரவ, இல்லை இல்லை.. இந்த இரண்டு வீடியோக்களும் வேறு வேறு என்று சிலர் தெளிவாக்கினார்கள்.

ALSO READ:  பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

இரு வருடங்களுக்கு முன்னர், வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வந்த குரங்கு ஒன்று, அழுத கண்களுடன் அம்பிகையை நோக்கி தியானத்தில் அமர்ந்தது. வெகு நேரம் அப்படியே ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்த குரங்கைக் கண்டு சிலருக்கு பக்திப் பரவசம், சிலருக்கோ பரிதாபம். அந்தக் குரங்குக்கு வயிற்றுப் பசி இருக்கும் என்று கருதி, அதற்கு வாழைப்பழம், பொறி கடலை என வாங்கி அளித்தனர். ஆனால் அந்தக் குரங்கோ, அம்பிகையைப் பார்த்தபடியே இருந்ததே தவிர, தின்பண்டங்கள் எதையும் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. இதனை அங்கிருந்தோர் ஆச்சரியத்துடன் பார்த்து வணங்கிச் சென்றனர்.

இப்படி, மனிதனுக்கு மட்டும்தான் தெய்வத்தை உணரும் ஆற்றல் உண்டா என்று கேட்டால், இல்லை இல்லை விலங்குகளுக்கும் தெய்வத்தன்மையை உணரும் அறிவு உண்டு என்று இத்தகைய சம்பவங்கள் மூலம் அறுதியிட்டுக் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories