விபரீத வைத்தியம்… மலத்துவாரத்திற்குள் ஈல் மீன். அதன்பின் என்னவாயிற்று என்றால்…
தற்போது நிறைய பேர் நீண்டகால மலச்சிக்கலால் அவதிப்படுகிறார்கள். மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு பலவித மருத்துவ சிகிச்சைகளையும் முயன்று வருகிறார்கள்.
சீனாவைச் சேர்ந்த ஒருவர் மலச்சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு ஒரு பைத்தியக்கார வேலை செய்தார். சுமார் 20 சென்டிமீட்டர் நீளமுள்ள ஒரு ஈல் மீனை தன் மலத்துவாரத்திற்குள் செலுத்திக் கொண்டார். ஆனால் அந்த மீன் மலத்துவாரத்தில் இருந்து மேலே நீந்திச் சென்று அவருடைய வயிற்றுக்குள் பிரவேசித்தது. அதனால் தீவிரமான வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அவருடைய வயிற்றில் இருந்து உயிரோடு இருந்த மீனை வெளியே எடுத்தனர்.
இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் சீனாவில் உள்ள ஜிங்ஹுவாவில் நடந்தது. நீண்டகாலமாக மலச்சிக்கலால் அவதிப்பட்டு வந்த ஒருவர் தன் பிரச்சனையை தீர்த்துக் கொள்வதற்கு கிராமங்களில் பழங்காலத்திலிருந்து செய்து வந்த ஒரு நாட்டு வைத்தியத்தை முயற்சித்தார். இது நிச்சயம் தன்னை காப்பாற்றும் என்று நம்பினர்.
20 சென்டிமீட்டர் நீளமுள்ள ஈல் மீனைப் பிடித்து வந்து உயிரோடு மலத்துவாரத்திற்குள் செலுத்திக் கொண்டார். ஆனால் அந்த மீன் மலக் குடலுக்குள் சென்று அங்கு ஓட்டையிட்டு வயிற்றுக்குள் நுழைந்தது. அதன் விளைவாக மென்மையான பெருங்குடலில் ஓட்டை விழுந்து அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டது. அந்த வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் நரக வேதனையை அனுபவித்தார்.
மருத்துவமனைக்கு சென்றால் தன் மானம் போய்விடும் என்று எண்ணி அந்த பயங்கரமான வலியையும் பொறுத்து பார்த்தார். ஆனால் வலி மிகவும் அதிகமாகி பொறுக்க முடியாமல் மருத்துவமனைக்குச் சென்றார். மருத்துவர்கள் மிகவும் கவனமாக ஆபரேஷன் செய்து அவர் உயிரைக் காப்பாற்றினர்.
இந்த சம்பவம் குறித்து ஆபரேஷன் செய்த டாக்டர் மீடியாவோடு உரையாடினார். பாதிக்கப்பட்டவரின் பெருங்குடலில் இருக்கும் பாக்டீரியா வயிற்றுக்குள் சேர்ந்துவிட்டால் ஹிமோலைசிஸ் என்னும் நோய் ஏற்பட்டிருக்கும் என்று எச்சரித்தார். ஹிமோலைசிஸ் நோய் ஏற்பட்டால் உயிர் போகும் ஆபத்து உள்ளது என்று அவர் கூறினார்.
இதற்கு முன்பே கூட 50 வயது சைனீஸ் மனிதர் ஒருவர் மலச்சிக்கலிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கு மலத்துவாரத்தில் ஈல் மீனை செலுத்திக் கொண்டார். அந்த மீன் வயிற்றுக்குள் நீந்திச் சென்றதால் அவருடைய நிலைமை மிகவும் மோசமானது.
அதனால் அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்த்தார்கள். மிக கஷ்டப்பட்டு மருத்துவர்கள் ஆப்ரேஷன் செய்து அவரை காப்பாற்றினர். கொஞ்சம் தாமதமாகி இருந்தால் அவருடைய உயிர் போயிருக்கும் என்று மருத்துவர்கள் கூறினார்கள்.
மக்கள் ஆபத்தான நாட்டு வைத்தியங்களை நம்பி உயிருக்கு உலை வைத்துக் கொள்ளக் கூடாது என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.