கேரளத்தில் ஜனம் டிவி., அலுவலகங்கள் மீது கம்யூனிஸ்ட் குண்டர்கள் தாக்குதல்!

cpm cyber commune - 2026

கேரளத்தில் ஜனம் டி.வி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் இடதுசாரி கம்யூனிஸ்ட் குண்டர்கள் !

இந்நிலையில், பத்திரிகைச் சுதந்திரம் , கருத்துச் சுதந்திரம் பற்றி பொங்குபவர்கள் வாய் திறக்காதது ஏன்? என்று சமூக வலைத்தளங்களில் இடதுசாரி கம்யூனிஸ்ட்  ஆதரவு ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் மீது கேள்விகளை எழுப்பியுள்ளனர் பலர். 

கேரளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரபூர்வமாக கைரளி என்ற டிவி சேனலை நடத்தி வருகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு டிவி சேனல் என தமிழகத்தைப் போல், ஊடக மாஃபியாக்கள் வலம் வரும் நிலையில், உண்மையை எடுத்துரைக்க சிலரால் தொடங்கப் பட்டது ஜனம் டிவி., ஒளிபரப்பைத் தொடங்கிய குறுகிய காலத்திலேயே நடுநிலையாளர்கள், பார்வையாளர்கள் பெரும்பாலானோரின் ஆதரவைப் பெற்று பேசப் பட்டு வருகிறது. 

இந்நிலையில், சபரிமலையில் நடைபெறும் போராட்ட நிகழ்வுகளை கடந்த மாதமும் சரி, நேற்றைய நடை திறப்பு நாளில் இருந்தும் சரி.. தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. இது கேரள கம்யூனிஸ அரசை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஊடக மாஃபியா உலகில் இருப்பவர்கள் இடதுசாரிகள் அல்லது கிறிஸ்துவ மிஷனரிகளின் கைக்கூலிகளாகவே இருக்க வேண்டும் என்ற எழுதப் படாத விதியை மீறி செயல்படும் ஜனம் டிவி., ஊடகத்தின் மீது மோசமான தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது ஆளும் கம்யூனிஸ்ட். 

மேலும், ஜனம் டிவி.,யின் பெயரில் பொய்யான தகவல்களை போட்டோஷாப் செய்து கம்யூனிஸ்ட்கள் வெளியிடுவதாக ஜனம் டிவி புகார் தெரிவித்துள்ளது. ஜனம் டிவி லோகோவுடன் பொய்த் தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பிவருவதாகவும் அது தெரிவித்துள்ளது. இஷான் திலீப் என்பவர் இதன் பின்னணியில் இருப்பதாகக் கூறியுள்ள ஜனம் டிவி., இது குறித்து சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்று கூறியுள்ளது.

இதை அடுத்து சைபர் பிரிவில் ஒரு புகார் பதிவு செய்யப் பட்டுள்ளது. அதில், பொய்யான செய்திகளை பரப்பி, அதில் ஜனம் டிவியின் லோகோவை பயன்படுத்துவதாகவும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

முன்னர், சபரிமலைக்குச் செல்ல முயன்ற ரஹேனா பாத்திமா என்ற பெண்ணின் கணவர் ஜனம் டிவியில் பணி புரிபவர் என்ற பொய்யை சிபிஎம் தொண்டர்கள் பரப்பி விட்டனர் என்றும், தற்போது, ஜனம் டிவியின் நற்பெயரைக் குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அது தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories