கேரளத்தில் ஜனம் டிவி., அலுவலகங்கள் மீது கம்யூனிஸ்ட் குண்டர்கள் தாக்குதல்!

cpm cyber commune - 2026

கேரளத்தில் ஜனம் டி.வி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் இடதுசாரி கம்யூனிஸ்ட் குண்டர்கள் !

இந்நிலையில், பத்திரிகைச் சுதந்திரம் , கருத்துச் சுதந்திரம் பற்றி பொங்குபவர்கள் வாய் திறக்காதது ஏன்? என்று சமூக வலைத்தளங்களில் இடதுசாரி கம்யூனிஸ்ட்  ஆதரவு ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் மீது கேள்விகளை எழுப்பியுள்ளனர் பலர். 

கேரளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரபூர்வமாக கைரளி என்ற டிவி சேனலை நடத்தி வருகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு டிவி சேனல் என தமிழகத்தைப் போல், ஊடக மாஃபியாக்கள் வலம் வரும் நிலையில், உண்மையை எடுத்துரைக்க சிலரால் தொடங்கப் பட்டது ஜனம் டிவி., ஒளிபரப்பைத் தொடங்கிய குறுகிய காலத்திலேயே நடுநிலையாளர்கள், பார்வையாளர்கள் பெரும்பாலானோரின் ஆதரவைப் பெற்று பேசப் பட்டு வருகிறது. 

இந்நிலையில், சபரிமலையில் நடைபெறும் போராட்ட நிகழ்வுகளை கடந்த மாதமும் சரி, நேற்றைய நடை திறப்பு நாளில் இருந்தும் சரி.. தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. இது கேரள கம்யூனிஸ அரசை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஊடக மாஃபியா உலகில் இருப்பவர்கள் இடதுசாரிகள் அல்லது கிறிஸ்துவ மிஷனரிகளின் கைக்கூலிகளாகவே இருக்க வேண்டும் என்ற எழுதப் படாத விதியை மீறி செயல்படும் ஜனம் டிவி., ஊடகத்தின் மீது மோசமான தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது ஆளும் கம்யூனிஸ்ட். 

மேலும், ஜனம் டிவி.,யின் பெயரில் பொய்யான தகவல்களை போட்டோஷாப் செய்து கம்யூனிஸ்ட்கள் வெளியிடுவதாக ஜனம் டிவி புகார் தெரிவித்துள்ளது. ஜனம் டிவி லோகோவுடன் பொய்த் தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பிவருவதாகவும் அது தெரிவித்துள்ளது. இஷான் திலீப் என்பவர் இதன் பின்னணியில் இருப்பதாகக் கூறியுள்ள ஜனம் டிவி., இது குறித்து சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்று கூறியுள்ளது.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

இதை அடுத்து சைபர் பிரிவில் ஒரு புகார் பதிவு செய்யப் பட்டுள்ளது. அதில், பொய்யான செய்திகளை பரப்பி, அதில் ஜனம் டிவியின் லோகோவை பயன்படுத்துவதாகவும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

முன்னர், சபரிமலைக்குச் செல்ல முயன்ற ரஹேனா பாத்திமா என்ற பெண்ணின் கணவர் ஜனம் டிவியில் பணி புரிபவர் என்ற பொய்யை சிபிஎம் தொண்டர்கள் பரப்பி விட்டனர் என்றும், தற்போது, ஜனம் டிவியின் நற்பெயரைக் குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அது தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories