அந்த அழைப்பிதழின்படி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடுவின் புத்தக வெளியிட்டு விழாவுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.
சென்னையில் ஆகஸ்ட் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த புத்தகத்தை வெளியிட்டார். இதில் விருந்தினர்களாக பங்கேற்பார்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருந்தது.
சமூக வலைதளங்களில் பரவிவரும் புத்தக வெளியீட்டு விழா என்று கூறப்படும் அழைப்பிதழில் நடிகர் ரஜினி காந்தின் பெயர் இடம் பெறவில்லை. எனவே ரஜினி காந்த் அழைக்காமலேயே விழாவில் பங்கேற்று இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பலரும் ரஜினி அழைக்காமலேயே சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறி புத்தக வெளியிட்டு விழா அழைப்பிதழை இணைத்துள்ளனர். மேலும் பாஜவின் மீது உள்ள அபிமானம் காரணமாகவே ரஜினி அழைக்காமலேயே சென்று பங்கேற்றதாகவும், அதில் காஷ்மீர் மாநிலத்துக்கான ஆர்ட்டிக்கல் 370 குறித்து பேசியதாகவும் விமர்சித்துள்ளார்கள்.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அவர் வரும் தகவல் ரகசியமாக இருந்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
So the question happens to be: how and why and on whose persuasion did @rajinikanth get on to the stage and speak on #Article370 when his name does not feature in the invitation card? @MVenkaiahNaidu, sir, may be you would know? I’m not sure @PrakashJavdekar would be aware! pic.twitter.com/yecFmKyMrq
— RadhakrishnanRK (@RKRadhakrishn) August 13, 2019