பகவத்பாதாளின் வேதாந்தக் கருத்து நம் அனைவருக்கும் தெரியும். “பரம்பொருள் ஸச்சிதானந்த வடிவமானது. அது ஒன்று தான் என்றும் நிலைபெற்றுள்ள ஸத்யம். அனைத்து உலகங்களும் அறியாமையால் தோன்றுபவையேயாகும்.
ஆத்ம தத்துவ ஞானத்தால், தோற்றமாக இருக்கும் இவ்வுலகம் அழிவடையும், பரப்ரஹ்ம ஸாக்ஷாத்காரத்தினால் முக்தி ஏற்படும்.
பரம்பொருள் உண்மையில், குணமற்றதாயினும் பக்தர்களுக்கு நன்மை செய்வதற்காக சிவன், விஷ்ணு போன்ற உருவங்களைப் பெற்றுக் கொண்டு மக்களுக்கு அனுக்ரஹம் செய்கிறது” என்று பகவத்பாதாள் உபநிஷத்துக்களின் கருத்தையே கொண்டிருந்தார்.