தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூரில் சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவிலில் புரட்டாசி திருவோண நட்சதித்திர நாளன்று ஏக தின தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது ஸ்ரீ நரஸிம்ஹபுஷ்கரணியில்(தெப்பகுளத்தில் ) காலை பெருமாள் எழுந்தருளினார் பின்பு தெப்பகுளத்திற்க்கு வாஸ்து சாந்தி ,பிரவேச பலி ,சர்வதோஷநிவர்த்திக்காக புருஷ சூக்தஹோம ம் ,கலசத்தில் வருண ஜெபம் ,கும்பாபிஷேகம் பின்னர் பெருமாளுக்கு தெப்பகுளத்தில் வைத்து விசேஷ அபிஷேகங்களும் உற்சவ மூர்த்தியுடன் தீர்த்தவாரி நடைபெற்றது ,பெருமாள் சப்பரத்தில் திருக்கோவிலையும்,தெப்பக் குளத்தையும்தீர்த்த வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது பின்னர் பக்த்தர்களுக்கு பிராசதம் வழங்கப்பட்டது மாலை சுவாமி சிறப்பு அலங்காரத்தில் திருக்கோவிலையும்,தெப்பக் குளத்தையும்தீர்த்த வலம் வருதல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது, பூஜையில் சித்தேஸ்வரி பீடம் மௌன சுவாமிகள் ,நெல்லை பாராளுமன்றஉறுப்பினர் கே.ஆர்.பி .பிரபாகரன் ஆகியோர் பூஜையில் கலந்துகொண்டனர்
பூஜைக்கான ஏற்பாடுகளை இந்து சமயஅறநிலையத்துறையினரும் ,ஸ்ரீ நரஸிம்ம சுவாமி கைங்கர்ய சபாவினரும் பக்தகோடிகளும் செய்திருந்தனர்
ஏகதின தீர்த்தவாரி
Popular Categories


