“பெரியவா மடியில் ஒரு சிறு குழந்தை பச்சைப் பாவாடை கட்டிக்கொண்டு

“பெரியவா மடியில் ஒரு சிறு குழந்தை பச்சைப் பாவாடை கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறதாம். அது யாருன்னு கேட்கிறான்” தொகுத்தவர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன். மகா பெரியவா சில நேரங்களில் தனது உண்மையான உருவம் இதுதான் என்று உலகோருக்குச் சில சம்பவங்கள் மூலம் துல்லியமாகத் தெரியப்படுத்தி உள்ளார். செட்டி நாட்டுப் பகுதியில் வசிப்பவர்கள் நகரத்தார் எனப்படுவர். அவர்களில் ஒருவர் மகாபெரியவாளிடம் ஒப்பற்ற பக்தி கொண்டிருந்தார். சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவர் நேரில்வந்து,மகானின் அருளாசியைப் பெறத் தவறியதே இல்லை. ஒரு தடவை மகானின் தரிசனத்திற்கு அவர் வந்தபோது தன்னுடன் தனது ஏழு வயது மகனையும் அழைத்து வந்தார். மகானின் ஆசியைப் பெற, இருவரும் தரிசித்துவிட்டு மகானின் அருளாசியைப் பெற்றுக்கொண்டு புறப்படவிருந்தனர். அந்தச் சமயம் சிறுவன் தனது தந்தையின் காதில் ஏதோ சொல்ல, அதைச் சொக்கநாதரான மகான் கவனித்துவிட்டு, “குழந்தை என்ன உங்களிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறான்?” என்று கேட்டார்கள். முதலில் அதைச் சொல்ல செட்டியார் தயங்கினார். சற்றைக்குப் பின், சமாளித்துக் கொண்டதும்,தன் மகன் கண்ட அதிசயத்தை மகானிடம் சொன்னார். “பெரியவா மடியில் ஒரு சிறு குழந்தை பச்சைப் பாவாடை கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறதாம். அது யாருன்னு கேட்கிறான்” என்று செட்டியார் தனது நடுங்கும் குரலில் மெதுவாகச் சொன்னார். மகன் சொல்வது அவருக்கே புதிராக இருந்தது. நம்பவோ, நம்பாதிருக்கவோ முடியவில்லை. மகான் என்ன சொல்லப் போகிறார்? செட்டியார் சில விநாடிகள் காத்துக் கொண்டிருந்தார். சற்று நேரம் அமைதியாகக் கழியவே, மகான் தனது அருள் வாக்கைச் சொன்னார். “உங்கள் மகன் சொன்னது உண்மைதான். ஸ்ரீமடத்தின் குருபாரம்பரியத்துக்கு அப்படி ஒரு வரப்பிரசாதம். அருள் இருக்கிறது.உங்களது மடியில் சாரதா தெய்வம் குடியிருப்பதாக ஓர் ஐதீகம். அது எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை. ஒரு குபேரனுக்குத் தான் தெரியும். (உங்களது என்பது எனக்கு புரியவில்லை-உள்ளபடிimages (3) டைப் அடிக்கிறேன்-வரகூரான்) உங்கள் மகன் கூடிய சீக்கிரம் குபேரனாவான்” என்று மகான் சொல்ல எல்லோரும் வியப்பில் ஆழ்ந்தனர். தனது இப்போதைய குடும்ப நிலையை வைத்துப் பார்த்தார் செட்டியார். குபேர அந்தஸ்தை கற்பனை கூட செய்து பார்க்க முடியாத நிலையில் இது எப்படி சாத்தியமாகும் என்று நினைத்தார். ஆனால் மனித தெய்வத்தின் வாக்கு எப்போதாவது பொய்த்தது உண்டா? இரண்டு வருடங்கள் கழிந்தன. செட்டியாரின் பையனுக்கு வயது ஒன்பது. அப்போதுதான் அந்த வீட்டுக்கதவை ‘அதிர்ஷ்டம்’ தட்டியது. செட்டியாரின் தூரத்து உறவினர் அவரிடம் வந்தார். எதற்காக? மகானின் அருள்வாக்கை மெய்ப்பிக்க வந்திருந்தார். உறவுகளின் சுக துக்கங்கள், மனக்குறைகளின் பரிமாற்றம் எல்லாம் வேகமாக நடந்து முடிந்தன. அச்சிறுவன் வேறு குடும்பத்திற்கு, கணக்கிட்டுச் சொல்ல முடியாது. செல்வத்திற்கு ஒரே வாரிசாக ஸ்வீகாரம் போனான்.மகானின் அருளாசி பலித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories