“பெரியவா மடியில் ஒரு சிறு குழந்தை பச்சைப் பாவாடை கட்டிக்கொண்டு

“பெரியவா மடியில் ஒரு சிறு குழந்தை பச்சைப் பாவாடை கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறதாம். அது யாருன்னு கேட்கிறான்” தொகுத்தவர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன். மகா பெரியவா சில நேரங்களில் தனது உண்மையான உருவம் இதுதான் என்று உலகோருக்குச் சில சம்பவங்கள் மூலம் துல்லியமாகத் தெரியப்படுத்தி உள்ளார். செட்டி நாட்டுப் பகுதியில் வசிப்பவர்கள் நகரத்தார் எனப்படுவர். அவர்களில் ஒருவர் மகாபெரியவாளிடம் ஒப்பற்ற பக்தி கொண்டிருந்தார். சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவர் நேரில்வந்து,மகானின் அருளாசியைப் பெறத் தவறியதே இல்லை. ஒரு தடவை மகானின் தரிசனத்திற்கு அவர் வந்தபோது தன்னுடன் தனது ஏழு வயது மகனையும் அழைத்து வந்தார். மகானின் ஆசியைப் பெற, இருவரும் தரிசித்துவிட்டு மகானின் அருளாசியைப் பெற்றுக்கொண்டு புறப்படவிருந்தனர். அந்தச் சமயம் சிறுவன் தனது தந்தையின் காதில் ஏதோ சொல்ல, அதைச் சொக்கநாதரான மகான் கவனித்துவிட்டு, “குழந்தை என்ன உங்களிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறான்?” என்று கேட்டார்கள். முதலில் அதைச் சொல்ல செட்டியார் தயங்கினார். சற்றைக்குப் பின், சமாளித்துக் கொண்டதும்,தன் மகன் கண்ட அதிசயத்தை மகானிடம் சொன்னார். “பெரியவா மடியில் ஒரு சிறு குழந்தை பச்சைப் பாவாடை கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறதாம். அது யாருன்னு கேட்கிறான்” என்று செட்டியார் தனது நடுங்கும் குரலில் மெதுவாகச் சொன்னார். மகன் சொல்வது அவருக்கே புதிராக இருந்தது. நம்பவோ, நம்பாதிருக்கவோ முடியவில்லை. மகான் என்ன சொல்லப் போகிறார்? செட்டியார் சில விநாடிகள் காத்துக் கொண்டிருந்தார். சற்று நேரம் அமைதியாகக் கழியவே, மகான் தனது அருள் வாக்கைச் சொன்னார். “உங்கள் மகன் சொன்னது உண்மைதான். ஸ்ரீமடத்தின் குருபாரம்பரியத்துக்கு அப்படி ஒரு வரப்பிரசாதம். அருள் இருக்கிறது.உங்களது மடியில் சாரதா தெய்வம் குடியிருப்பதாக ஓர் ஐதீகம். அது எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை. ஒரு குபேரனுக்குத் தான் தெரியும். (உங்களது என்பது எனக்கு புரியவில்லை-உள்ளபடிimages (3) டைப் அடிக்கிறேன்-வரகூரான்) உங்கள் மகன் கூடிய சீக்கிரம் குபேரனாவான்” என்று மகான் சொல்ல எல்லோரும் வியப்பில் ஆழ்ந்தனர். தனது இப்போதைய குடும்ப நிலையை வைத்துப் பார்த்தார் செட்டியார். குபேர அந்தஸ்தை கற்பனை கூட செய்து பார்க்க முடியாத நிலையில் இது எப்படி சாத்தியமாகும் என்று நினைத்தார். ஆனால் மனித தெய்வத்தின் வாக்கு எப்போதாவது பொய்த்தது உண்டா? இரண்டு வருடங்கள் கழிந்தன. செட்டியாரின் பையனுக்கு வயது ஒன்பது. அப்போதுதான் அந்த வீட்டுக்கதவை ‘அதிர்ஷ்டம்’ தட்டியது. செட்டியாரின் தூரத்து உறவினர் அவரிடம் வந்தார். எதற்காக? மகானின் அருள்வாக்கை மெய்ப்பிக்க வந்திருந்தார். உறவுகளின் சுக துக்கங்கள், மனக்குறைகளின் பரிமாற்றம் எல்லாம் வேகமாக நடந்து முடிந்தன. அச்சிறுவன் வேறு குடும்பத்திற்கு, கணக்கிட்டுச் சொல்ல முடியாது. செல்வத்திற்கு ஒரே வாரிசாக ஸ்வீகாரம் போனான்.மகானின் அருளாசி பலித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

Entertainment News

Popular Categories