“சத்தம் அதிகம் வரும் பாகம் அடி, குறைவாக உள்ளது நுனி.”

“சத்தம் அதிகம் வரும் பாகம் அடி, குறைவாக உள்ளது நுனி.” (பெரியவாளின் சிற்பக்கலை நுட்பம்) தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் 1234201_315112848661397_4724600860700186658_n பத்ராசலத்தில் ஸ்ரீராமர் கோயில் திருப்பணி நடந்து முடிந்தது. கோயில் திருப்பணியில் கை தேர்ந்த கணபதி ஸ்தபதி அந்த பொறுப்பை ஏற்றிருந்தார். பத்ராசலத்துக்கு யாத்திரையாக வந்திருந்த மகாபெரியவர்களிடம் “தாங்கள் அவசியம் வந்து பார்வையிட வேண்டும்.தங்கள் கடாக்ஷம் வேண்டும்” என அழைத்தார் ஸ்தபதி.பெரியவர்கள் கோதாவரியில் ஸ்நானத்துக்குச் செல்லும் வழியில் அங்கே நுழைந்தார்கள். கல்தூண் ஒன்றில் சிற்பம் செதுக்கும் வேலை நடந்து வந்தது. “இந்தத் தூணுக்கு அடிப்பாகம் எது,நுனிப்பாகம் எது” என்று கேட்டார்கள் பெரியவர்கள். ஸ்தபதிக்கு ஒரே திகைப்பு! ‘இதைப் பார்த்தாலே தெரிகிறதே! இப்படி ஏதோ குழந்தைத்தனமாகக் கேள்வி கேட்கிறார்களே!’ என்று எண்ணியபடி அந்தப் பாகங்களைச் சுட்டிக் காண்பித்தார். “இந்த அடிப்பாகத்தை நுனியாகவும்,நுனியை அடிப்பாகமாகவும் மாற்றலாமா?”என்று கேட்டார்கள். ஸ்தபதிக்கு ஒரே குழப்பமாக இருந்தது. “செதுக்குவதற்கு முன்னால் ஒவ்வொரு தூணுக்கும் இதுதான் அடிப்பாகம்,இதுதான் நுனி என்று எப்படித் தீர்மானம் செய்வாய்” என்று கேட்டார்கள் சுவாமிகள். ஸ்தபதி பதில் சொல்லத் தெரியாமல் நின்றார். “சுத்தி எடுத்துவா, இதைக் கீழேயிருந்து மேல் வரை கத்தியால் தட்டு.ஏதாவது தெரிகிறதா பார்”என்றார்கள். தட்டியபிறகு ஸ்தபதிக்கு ஏதோ ஒரு சந்தேகம். ஆனால் சொல்லத் தெரியவில்லை. “மீண்டும் ஒருமுறை தட்டு.அதிலிருந்து வரும் சத்தத்தைக் கவனி” என்றார்கள். “கீழே சத்தம் ‘கணீர்’ என்று வருகிறது. மேலே செல்லச் செல்ல சத்தம் குறைகிறது” என்றார்,ஸ்தபதி. “மரத்திலே வைரம் பாய்ந்த கட்டை என்பார்கள். அது சிகப்பாகக் கெட்டியாக இருக்கும். சுலபமாகப் பிளக்க முடியாது.அதிலிருந்துதான் மரப்பாச்சி- மரப்பொம்மை செய்வார்கள்.நீ அதைப்பற்றி கேட்டிருப்பாய். அதுபோலதான் கல்லிலும் வைரம் பாய்ந்த பாகம் கெட்டியாய் இருக்கும். அதிலிருந்து வெண்கலம் போல ‘கணீர்’ என்று சத்தம் வரும். அதுவும் கெட்டியாக (அடர்த்தி நிறைந்ததாக) இருக்கும். அந்தப் பகுதியைத்தான் அடிப்பாகமாகக் கொள்வார்கள். “சத்தம் அதிகம் வரும் பாகம் அடி; குறைவாக உள்ளது நுனி. நீ சரியாகத்தான் வைத்திருக்கிறாய். உனக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. சொல்லத்தான் தெரியவில்லை” என்றார்கள் பெரியவர்கள். ஸ்தபதி உடனே சாஷ்டாங்கமாகப் பெரியவர்களின் காலில் விழுந்து நமஸ்கரித்து, “தங்கள் அருளால்தான் எல்லாம் நன்றாக அமைய வேண்டும்” என்று பிரர்த்தித்தார். அப்படியே அமைய ஆசீர்வதித்தார்கள் பெரியவர்கள். எல்லாக் கலைஞர்களுமே இப்படித்தான் முதலில் சாமான்யமாக மதித்து,கடைசியில்,’இவர்களிடம் நாம் கற்கவேண்டியது நிறைய இருக்கு’ என்ற முடிவுக்கு வருவார்கள். தெய்வத்துக்கு தெரியாத கலை ஏதும் உண்டா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories