கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 4

“சரித்ரம் எழுதிண்டிருக்கியோ?” என்னத்தை எழுதுவது? அதுதான் நிறுத்தச் சொல்லி உத்தரவு போட்டுவிட்டாரே! புண்படுத்தியது போதாதென்று புண்ணைக் குத்தியும் பார்க்கிறாரா? – சீ, அப்படி எண்ணுவது மஹா பாபமில்லை? ஆனாலும் ஏன் இப்படிக் கேட்கிறார், புரியவில்லை. “சரித்ரம் எழுதிண்டிருக்கியா-ன்னேன். பதிலைக் காணுமே! காது கேக்கலியா?” என்றவர் சற்று நிறுத்தி “கோவமா?” என்றார். வெட்கம் பிடுங்கித் தின்றது. “வேண்டாம்னுதான் உத்தரவாயிடுத்தே, அதனால எழுதுறதை நிறுத்திட்டேன்” என்றேன். அவரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவேண்டும் என்று படுபாதகமான உள்ளெண்ணத்துடன் வந்தவன், ஏனென்று தெரியாமல், நானே அதில் எறியவனாகச் சொன்னேன்! “யார் உத்தரவு போட்டா? – விசித்ரம் to the nth degree – ஆன கேள்வி! எங்கோ ஏதோ பெரிய இசகு-பிசகு நடந்திருக்கிறதோ என்ற குழப்பத்துடன், “பெரியவா அப்டி சொன்னதாத்தானே சாம்பமூர்தி சாஸ்திரிகள் சொன்னார்?” “நீ எழுதவேண்டாம்-னு நான் சொன்னேன்னா அவர் சொன்னார்? அப்டியானா, நான் அவரைக் கூப்பிட்டு விசாரிக்கிறேன். ஆனா அவர் ஸரியா சொல்லப்பட்டவர்தான். என் கொனஷ்டை ஓரளவுக்கு நான்னாவே தெரிஞ்சவரானதால நான் சொல்றதை அப்டியே கார்பன் காபியாகச் சொல்றவர்தான். அதனால் அவரை நான் விசாரிக்கிறதுக்கு முந்தி நீயே ஸரியா ஞாபகப்படுத்திண்டு சொல்லு – ‘கல்கி’ல தொடரை நிறுத்தணும்னு உத்தரவு-ன்னாரா? இல்லாட்டா, நீ சரித்ரம் எழுதறதை நிறுத்தணும்-னாரா?” ஆஹா, ஆஹா! அப்படியொரு பாதுபாடா? உற்சாகக் கீற்று உள்ளிருந்து புறப்பட ஞாபகப்படுத்திக் கொண்டு பார்த்தேன். ‘ஆம், தொடரை நிறுத்துவது பற்றியே உத்தரவு, நான் எழுதுவது பற்றியல்ல’ என்று புரிந்துகொண்டேன். நான் ஏதோ பிழை செய்தேன் என்பதற்காகத் தடை விதிக்கப்படவில்லை என்பது எனக்கு மிக்க ஆறுதலளித்தது. நான் எழுதத் தடையில்லை என்பது முதலில் உற்சாகம் அளித்தது என்றாலும், அது உடனே தளர்ந்தும் விட்டது. நான் பெரியவாள் சரிதம் எழுதினால் அதைக் ‘கல்கி”யில் வெளியிடாமல் வேறென்ன செய்வது? உலக மவுசில் என்னை ‘ஆளாக்கி விட்ட’ அந்த நிறுவனத்திற்கு நான் அந்நாளில் பட்டிருந்த கடன் என்னை வேறுவிதத்தில் சரிதத்தை விநியோகிப்பது பற்றி எண்ண இயலாதவனாக ஆக்கியிருந்தது. தவிர, நான் எழுதலாம், ஆனால் அந்த ஏட்டில் சரிதை வெளிவருவதற்கே தடை என்றால் அது மட்டும் என்ன பிழை செய்தது? இதையெல்லாம் அவரிடம் கேட்க வாய் வரவில்லை. மீண்டும் ஏமாற்றம் – கோபதாபம் அபச்ருதி கூட்டியது. ஆனாலும் மேற்கொண்டு தொடர்ந்து உரையாடலில் எல்லாக் கேள்விக்கும் விடை கிடைத்துவிட்டது. தொடரை நிறுத்த உத்தரவென்றுதான் சாஸ்திரிகள் தெளிவாகத் தெரிவித்தாரெனக் கூறினேன். “பூர்ணக்கும்பம் பூர்ணமாகவே நீ குடுத்து நானும் வாங்கிண்டு ரொம்பியாச்சு, இப்போதிக்கு இதுவே பூர்ணம்-னு, கொறைப்படாம இரு” என்று அவர் தொடங்க, ஏமாற்ற-கோபங்கள் உள்ளழுகையாக மாறின. (அந்த ஏமாற்ற-கோபங்களையும் உள்ளேயேதானே பதுக்கிக் கொண்டிருந்தேன்?) மெய்யாலுமே ஒரு நிறைவு ஏற்பட்டுவிட்டது. “இப்போதிக்கு” என்று அவர் சொன்னதில் ஓர் உலகமே – அர்த்தமுள்ள, ஆறுதலான ஓர் உலகமே- இருப்பதாக உள்ளுணர்ச்சி புறப்பட்டது. “படிக்கிறவா, பத்ரிகை வித்துக் குடுக்கிறவா-ள்ளாம் இந்த மாதிரி ஆனதுல, ஒன்னைப் பைத்தியக்காரன்-றாளா, (கல்கியின் அந்நாள் அதிபர்) சதாசிவத்தைப் பைத்தியக்காரன்-றாளா, இல்லாட்ட என்னை பைத்தியக்காரன்-றாளா? என்று வழிய வழியச் சிரிப்போடு கேட்டார். “எல்லோருக்கும் ரொம்பவே ஏமாத்தம், வருத்தம்” என்பதற்கு மேல் இதற்கென பதில் சொல்ல? ஸ்வாமிகள் பெர்மிஷன் இல்லமாலே எழுதினியா? போட்டயா?’ ன்னு ஒன்னை அவரைத் திட்றாளோ” திட்ட இடமுண்டுதான். ஆனால் ஆச்சரியமாக, அப்படி ஏதும் நாங்கள் கேள்விப்படவுமில்லை; கடிதமாகவும் வரவில்லை. அதை அவரிடம் சொல்லி, “பெரியவா பெர்மிஷன் இல்லாம நாங்க இப்டி ஒண்ணுல ஏறங்கியிருக்க மாட்டோம்னு பொதுவா ஒரு நல்ல எண்ணம் இருக்காப்ல இருக்கு, அதோட, ஒரு மாஸத்துக்கு முன்னாடிலேந்தே கல்கில அனௌஸ்மென்ட் பண்ணிட்டிருக்கிறோம். வெளி அட்வர்டிஸ்மெண்டும் குடுத்திருக்கோம், அதனால முன்கூட்டியே பெரியவாளுக்கு விஷயம் தெரியாம இருந்திருக்காது-ன்னுதான் எல்லோரும் நெனச்சிருக்க கூடும்” என்றேன். “ஜாக்ரதையா பேசறியே! ‘இருக்காப்ல இருக்கு’, நெனச்சிருக்கக்கூடும்’ – “ மெச்சுதலைக் காட்டும் அழகான சிரிப்பு! வெட்கமாக இருந்தது – பாக்ய உணர்விலேயே! -தொடரும்.. ஸ்ரீ ரா.கணபதி அண்ணா அவர்களின் தொகுப்பில் இருந்து பிரசுரிக்கபட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories