spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்மகா பெரியவர் மகிமை"எந்த தீட்டாக இருந்தாலும் அந்த இடத்துல கோ பாத துளி பட்டுட்டா,அந்த இடம் பரிசுத்தமாயிடறது"

“எந்த தீட்டாக இருந்தாலும் அந்த இடத்துல கோ பாத துளி பட்டுட்டா,அந்த இடம் பரிசுத்தமாயிடறது”

“எந்த தீட்டாக இருந்தாலும் அந்த இடத்துல கோ பாத துளி பட்டுட்டா,அந்த இடம் பரிசுத்தமாயிடறது”

(பெண்கள் காலேஜில் பெரியவா விஜயம்)

திருச்சிராப்பள்ளியில் மாமுனிவர் தங்கி இருந்த சமயம் சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியின் தலைவர் மஹானிடம் வந்து தங்கள் கல்லூரியில் பெரியவரின் பொற்பாதம் பட வேண்டும்,குழந்தைகளுக்கு ஆசி வழங்கவேண்டும் என்று விண்ணப்பித்தார்.

மோன குரு பதில் ஏதும் சொல்லவில்லை.அவரும் தொடர்ந்து விண்ணப்பித்தவாறே இருந்தார். ஒரு நாள் அவரிடம் “நாளை காலை உன்காலேஜிக்கு வரேன்.நீயும் உன்மனைவியும் ஒரு பசுமாடு கன்றுக்குட்டியோடு காத்திருங்கோ” என்றார்.

பக்தருக்கு அளவிலா மகிழ்ச்சி.அப்படியே தயாராகஇருக்க மஹானும் வந்தார்.பூர்ணகும்ப வரவேற்பை அங்கீகரித்தார்
.
பக்தரிடம் “என் பாதம் எங்கெல்லாம் படணும்னு உனக்கு ஆசையோ அங்கெல்லாம் பசுமாடு கன்றுக்குட்டியை பிடிச்சுண்டு நீ முன்னாலே போ பின்னாலேயே நான் வரேன்” என்றார்.

அப்படியே எல்லா இடமும் சென்று வந்தபின் வெளியே
வந்து திருப்தியா உனக்கு என்று கேட்க அவர் என்ன பதில் சொல்வார்.கண்கள் கடலாக, மனம் உருகி கருணைக்கு நன்றி தெரிவிப்பதற்காக சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். ஶ்ரீமடம் திரும்பிய மஹான் மாலை அடியார்களிடம் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது காலையில் காலேஜ்க்கு போன பேச்சு வர,ஒருவர் பெரியவா ஏன் காலேஜ்ல பசு மாட்டு பின்னாலேயே போனார் என்று கேட்டார்.

சிரித்தமஹான் அவன் எங்கிட்ட ரொம்ப பக்தியாயிருக்கான் நான் வந்தா அவன் காலேஜ் ச்ரேயஸ்னு நினைச்சு கூப்பிட்டான்,ஆனால் அந்த காலேஜ் ஸ்தீரிகள் படிக்கும் காலேஜ்.அவா எல்லா நாளும் காலேஜுக்கு வருவா.மாதம் விலக வேண்டிய நாளும் வரலாம்.அதனால் என் ஆசாரத்துக்கு அங்க போய் எப்படி மிதிக்கிறது? அதனால தான் யோசனை செய்தேன்.அவன் ஆசையும் நிறைவேறணும் என் ஆசாரமும் கெடக்கூடாது.அதுக்கு ஒரே வழி,எந்த தீட்டாக இருந்தாலும் அந்த இடத்துல கோ பாத துளி பட்டுட்டா,அந்த இடம் பரிசுத்தமாயிடறதா சாஸ்த்திரத்தில இருப்பதால்,பசுமாட்ட முன்னால் விட்டு பின்னாலேயே நானும் போயிட்டு வந்தேன் என்று சொன்னதைக் கேட்ட அனைவரும் பிரமிப்பில் இருந்து மீளவே இல்லை.

இப்படியும் தர்ம சூட்சமமா? இப்படியும் அறம் வழுவா துறவு வாழ்க்கையா? காலத்தின் மேல் பழி போட்டு பழி பாபங்களுக்கு அஞ்சாதவர்கள் நிறைந்த இப்பூமியில் ஒரு அறநெறிச் செம்மலா

அன்பையும் அறத்தையும் அழகாக் இணைக்கும் சாமர்த்தியம் நம் காஞ்சி மஹானைத் தவிர வேறு யாருக்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe