காஞ்சி மாமுனி போற்றி

Published:

மலை போல் துயரம் வந்திடும் போது வந்தங்கு காக்க வரும் நம் காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர்

ஒரு முறை நினைத்தாலும் மனமுருகி நினைப்பவரை 
காத்திடும் தெய்வமன்றோ நம் காஞ்சி மாமுனி சங்கரர் !
ஒரு முறை மனதார தாயே என்றழைக்க 
வரமழை தந்திடுவார் நம் காஞ்சி மாமுனி சங்கரர்!

ஒரு மனதாய் வேண்டி நிற்க இருகரத்தால் தாங்குகின்ற 
இறைவனன்றோ நம் காஞ்சி மாமுனி சங்கரர் !
பகவானே என்றழைக்க பரிவுடனே பார்த்து நம்
பிறவிப் பயன் தீர்த்திடுவார் காஞ்சி மாமுனி சங்கரர்!

தன் பதம் சேர்த்து நம்மை தூயதாய் ஆக்குகின்ற 
துறவியன்றோ நம் காஞ்சி மாமுனி சங்கரர்!
தலை வணங்கி அழைப்பவரின் நிலை உயரச் 
செய்கின்ற தாயானவர் நம் காஞ்சி மாமுனி சங்கரர்!
எளிமையை உணர்த்திடவே காஞ்சி மாமுனிகளின் ஆண்டிக்கோலம் 
ஞானத்தை தந்திடவே காஞ்சி மாமுனிகளின் மெய்ஞானி கோலம் 
தூயமனம் படைத்தவரை ஆட்க்கொள்ள காஞ்சி மாமுனிகளின் துறவிக்கோலம் 
பிணி தீர்க்க துயர் துடைக்க அற்புதமான காஞ்சி மாமுனிகளின் தாய்க்கோலம் 
நல்ல வழி காட்டிடவே தண்டம் ஏந்திய காஞ்சி மாமுனிகளின் திருக்கோலம் 
நல்லதையே தந்திடவே துளசி அணிந்த காஞ்சி மாமுனிகளின் அருட்கோலம் 
தவக்கோலம் கொண்ட காஞ்சி மாமுனிகளின் திருக்கோலம் 
அந்த காஞ்சி மாமுனிகளின் பெருங்கோலம் காணும் கண்ணில் நீர்க்கோலம்
புனிதமான துளசி மாலை காஞ்சி மாமுனிகளின் சிரசிலே 
மனிதம் காக்க தண்டமதோ காஞ்சி மாமுனிகளின் கையிலே 
அனுதினமும் அருளாசி காஞ்சி மாமுனிகளின் நாவிலே 
குறை உண்டோ இனிமேல் நம் வாழ்விலே !
சந்தனம் பொலிவாய் துலங்கும் நெற்றியிலே 
சௌபாக்கியம் அழகாய் மலரும் நம் வழியிலே 
மெருகிடும் காவி உடை காஞ்சி மாமுனிகளின் மேலிலே 
செருக்கினை அழித்திருக்கும் முதலிலே 
உருகிடும் காஞ்சி மாமுனிகளின் பக்தர்களின் மனதிலே 
வழிந்திடும் தாயின் ஆசி காஞ்சி மாமுனிகளின் உள்ளிலே
தாயாய் வந்த ஆதிசிவ காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர் …
தவமாய் நின்ற பரமசிவ காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர் …
நீரோடையாய் நடந்த காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர்
பார் முழுவதும் கலந்த காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர்
ஞானஒளி ஏற்றின காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர்
கார்மேகமாய் படர்ந்த காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர்
கருணை மழையென பொழிந்த காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர்
தூயவர் காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர்
மலை போல் துயரம் வந்திடும் போது வந்திங்கு காக்க வரும் நம் காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர்
காஞ்சியிலே அமர்ந்து கருணை மழை பொழியும் காமகோடி ரூப பீடனே – காலமெல்லாம் சதா சர்வ காலமெல்லாம் காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர் உமைப் பணிந்து பாடுகின்ற பாக்கியம் தந்தருளவேண்டும்!
ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர!ஜய ஜய சங்கர ! ஹர ஹர சங்கர !

***

எழுத்தாக்கம்: 
ஸ்ரீ காஞ்சி காமகோடி மஹா பெரியவா தாஸன் 
டாக்டர். கி.பாலசுப்ரமணியன்

Related articles

Recent articles

spot_img