கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 10

கன்னடத்துல ‘ஓடையாரு’—ஸ்வாமி – உடையவர் ஒரே அர்த்தம்-கிறது தெரியுமோ?” என்று கேட்டார். “பெரியவா சொல்லித் தெரியும். ‘ஸ்வம்’-னா சொத்து, ‘ஸ்வம்-த’-ங்கிறதுலேந்துதான் ‘சொந்தம்’, ‘சொத்து’ ரெண்டும் வந்திருக்கு. அதுக்கு சுத்தத் தமிழ் வார்த்தை ‘உடைமை’. ஸகல சராசரமும் எவனுக்கு ‘ஸ்வம்’மோ, உடைமையோ அவனே ‘ஸ்வாமி’, ‘உடையவர்’-னு பெரியவா சொல்லியிருக்கா.” ஸ்ரீ சரணர் முகத்தில் சந்தோஷம் தெரிந்தது. சொன்னார்:’வைஷ்ணவா ராமானுஜரை உடையவர்-னா, விஜயநகர டைனாஸ்டிக்கரா இங்கே ஆட்சி பண்ணிண்டு இருக்கச்சே, நம்ம ஆசார்யாளை ஓடையாரு-வா நெனச்சு, அப்டியே சொல்லி, ஜனங்ககிட்டேயும் அதுவே பழக்கத்துல வந்து, அதுவே ‘லீக’லாக்கூட எங்க டைட்டிலாயி, ‘சிக்குடையார் மேரை’, ‘சிக்குடையார் மான்யம்’ எல்லாமே காணிக்கைகளுக்குப் பத்ரங்கூட எழுதறதா ஆச்சு. “ஏன் ‘ஒடையாரு’ன்னு மட்டுமில்லாம, ‘சிக்க’ன்னும் போட்டு ‘சின்ன ஸ்வாமி’யாகத்தான் சொன்னா-ன்னு கேள்வி வரதோல்லியோ? இந்தக் காஞ்சிபுரத்துல ‘ஸ்வாமி’- ‘ஒடையாரு’ன்னு மொத ஸ்தானம் குடுத்து அவா சொன்னது ஏகாம்பரேச்வரரைத்தான். அவரும் ஸ்வாமி, அவருக்கு அடுத்தாப்ல ரெண்டாம் ஸ்தானம் இந்த மடத்து ஸ்வாமிகளுக்குத்தான்-னு வெச்சு இவரும் ஸ்வாமிதான்-னு அவா பெரிய மரியாதைதான் பண்ணினா; ஆசார்யாளைக் கொளச்சு சொல்லலை, ஆனாலும் ரெண்டையும் ‘ஒடையாரு’-ன்னா கொழறுபடியாத்தானே ஆகும்? வித்யாஸம் தெரியனுமோல்லியோ? அதுக்காகத்தான் ஏகாமபரேச்வரருக்கு ‘தொட்ட ஒடையாரு’- ‘தொட்ட’ன்னா ‘பெரிய’ அவர் பெரிய ஸ்வாமி – சங்கராசார்யார் ‘சிக்க ஒடையாரு’, ‘சின்ன ஸ்வாமி’ன்னு சொன்னா__ பெரியசாமி, சின்னசாமி என்ற பேர் வெச்சுக்றதே இதிலேருந்துதான் வந்ததோ, என்னவோ?—“ “இப்டி ஆசார்யாளை, ஆசார்யாள் மடத்து ஸ்வாமிகள் எல்லாரையும் ‘சின்ன ஸ்வாமி’ன்னு சொல்றதா ஏற்பட்டிருப்பதால், நீ கலவைப் பெரியவா விஷயமா சொன்னதுக்கும் வேறே ஒரு மாத்தம் (மாற்றம்) சொல்றேன். கலவை ஸ்வாமிகள் ரெண்டு பேர்ல, பெரியவரை ‘பெரிய ஸ்வாமி’-ன்னும், அடுத்தவரை ‘சின்ன ஸ்வாமி’ன்னும் வேணா சொல்லலாம்-“ ஆயினும் ‘சின்னப் பெரியவா’ளை ஸ்ரீ சரணர் ஏற்கவில்லைதான்! அவ்வாறு எழுதிய என்னிடம் அவர் குறைகண்டதாக அடிகொண்ட அகந்தை துரத்திக் கொண்டு வந்தது. என்னை ஜஸ்டிஃபை செய்து கொள்ள, “நம்மாழ்வார் ‘சிறுமா மனிசர்’னு சின்னதையும் பெரிசையும் சேத்து மஹான்களைக் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார்’ என்றேன். பெரியவாளையே நான் அவரைப் பற்றி எழுத ஆரம்பித்த வரலாற்றில் அப்படி வர்ணித்திருந்தேன். அவரது ஜயந்தியான வைகாசி அனுஷத்தின் பல பெருமைகளைச் சொல்லுமிடத்தில், அதே நாளில் பிறந்த ஸ்ரீ வைஷ்ணவப் பெரியாரான பராசர பட்டரைச் சொல்லி, அவர் குழந்தையாயிருந்த போதே ‘சிருமாமனிசர்’ என்பதற்குப் பொருள் கேட்டுத்தெரிந்து கொண்ட பொருத்தத்தைக் காட்டியிருந்தேன். -தொடரும்.. ஸ்ரீ ரா.கணபதி அண்ணா அவர்களின் தொகுப்பில் இருந்து பிரசுரிக்கபட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories