“அந்தக் கொழந்தைக்கு எப்படி இருந்திருக்கும்னு கொஞ்சம் தெரிஞ்சுக்கிறதுக்குதான்..”

20683_671948076266709_3512172854606087227_n (பெரியவாளின் வேதனை) (வேறு சில எழுத்தாளர்களின் தட்டச்சு முன்பு பதிவு செய்துள்ளேன்.ரா.கணபதியின் எழுத்தில் முதன் முறையாக) கட்டுரை-ரா கணபதி.. தட்டச்சு-வரகூரான் நாராயணன். அவர் ஆஸ்தானம் கொண்டிருந்த தேனம்பாக்கம் சிவாஸ்தானத்தில் அன்று இளங்காலை ஒரே பரபரப்பு,பதைபதைப்பு என்றே சொல்லலாம். உடனிருந்தோர் உறக்கம் கலைந்து பார்க்கும் போது பெரியவாளைக்காணோம். சிவாஸ்தான ஆலயச் சூழலில் முழுதும் தேடிப் பார்த்தும் காண முடியவில்லை. பரபரப்பும் பதைபதைப்பும் ஏற்படாதிருக்குமா? அடியார்கள் சுற்றுப் புறம், அதைக் கடந்தும் சல்லடை போட்டுத் தேடிக் கொண்டே போனார்கள். முடிவாக, அங்கு ஓடிய சிற்றாற்றின் கரையில்…… என்ன கொடூரம்! முட்புதர்கள் மண்டிக் கிடக்கும் ஓரிடத்தில் ஸ்ரீசரணர் சுருண்டு கிடக்கிறார். “அவராக வந்து இங்கு முள்ளுப்படுக்கை உவந்தாரா, அல்லது..?- எண்ணாததெல்லாம் எண்ணி அடியர் கணம் அருகு நெருங்க, அவர் பளிச்சென எழுந்தமிர்கிறார். அந்த மட்டும் வயிற்றில் பால் வார்த்து விட்டார். ஆயினும் திருமேனியில் அப்பினாற்போல முள் அங்கி பூண்டுள்ள கோலம் அடியார்களின் நெஞ்சில் கூர்ப்பாகத் தைக்கிறது. வயது முதிர்ந்த ஒரு பக்தர், “ஐயோ, பெரியவா! இதென்ன சோதனை?” என்று வாய்விட்டு அலறுகிறார். பெரியவாள் சொல்கிறார். “இந்த நாள்ல ஜனஸமூஹத்தை வசீகரிச்சுப் பிடிச்சுண்டிருக்கிறதா, கை நெறய ஸம்பாதிக்கிறதுக்குத் தினுஸு தினுஸாப் படிப்புகள் இருக்கு. அப்படி இருக்கிறப்ப, என் வார்த்தையை மதிச்சு,(நெகிழ்ந்த குரலில்) என்னை நம்.பிண்டு சில தாயார்-தோப்பனார்மார் தங்கள் குழந்தைகளை வருமானம், ‘ஆனர்’,’ஃபாஷன்’ எதையும் கவனிக்காம, (வேத) பாடசாலைகளுக்கு அனுப்பிண்டிருக்கா. அந்தக் கொழந்தைகளும் ஊர் ஒலகத்துல ஒடனொத்த கொழந்தைகள் தினம் ஒரு ட்ரெஸ், வேளைக்கு ஒரு ஹோட்டல்னு இருந்துண்டிருக்கிறப்ப, ஒரு மூணறை மொழ சோமனைச் சுத்திண்டு, போடற உண்டைக் கட்டியைத் தின்னுக்கிண்டு, வெளில தலை காட்டினாலே, ‘சிண்டுடோய்!னு பரிஹாஸத்தை வாங்கிக் கட்டிக்கிண்டு, தொண்டை தண்ணிவத்த ஸந்தை சொல்லிண்டிருக்குகள்.” ஏதோ ஓரிடத்தில் ஸ்ரீ மடத்தின் ஆதரவில் நடைபெறும் பாடசாலையைக் குறிப்பிட்டுவிட்டுத் தொடர்கிறார். “அங்கே கொழந்தைகள் என்னமோ விஷமம் பண்ணிடுத்துகள்-ங்கிறதுக்காகச் சமையக்கார அம்மா புதுத் தொடைப்பத்தால் அடிச்சுட்டாளாம். வேதம் படிக்கிற அந்தக் கொழந்தைகளுக்கு எப்படி இருந்திருக்கும்னு கொஞ்சம் தெரிஞ்சுக்கிறதுக்குத்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories