சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் குவித்தோவா: பெடரர், ஜோகோவிச் முன்னேற்றம்

01 Aug19 Tennis - 2026

அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட செக் குடியரசின் பெத்ரா குவித்தோவா தகுதி பெற்றார். கால் இறுதியில் எலிஸ் மெர்டன்சுடன் (பெல்ஜியம்) மோதிய குவித்தோவா 7-5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த மெர்டன்ஸ் 7-5 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் அதிரடியாக விளையாடி மெர்டன்சின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த குவித்தோவா 7-5, 5-7, 6-3 என்ற கணக்கில் 2 மணி, 42 நிமிடம் போராடி வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு கால் இறுதியில் நம்பர் 1 வீராங்கனை சிமோனா ஹாலெப் (ரோமானியா) 6-4, 6-1 என்ற நேர் செட்களில் லெசியா சுரென்கோவை (உக்ரைன்) எளிதாக வீழ்த்தினார். மேடிசன் கீஸ் (அமெரிக்கா) – அரினா சபலென்கா (பெலாரஸ்) இடையே நடந்த கால் இறுதியில், சபலென்கா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டன்ஸ் தனது கால் இறுதியில் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் எலினா ஸ்விடோலினாவை (உக்ரஇன்) வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அரை இறுதியில் ஹாலெப் – சபலென்கா, குவித்தோவா – பெர்டன்ஸ் மோத உள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் 7-5, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை வீழ்த்தினார். ஸ்பெயினின் பாப்லோ கரினோ புஸ்டா தனது கால் இறுதியில் 6-7 (7-9), 4-6 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் மரின் சிலிச்சிடம் போராடி தோற்றார். பெல்ஜியம் வீரர் டேவிட் காபின் 7-6 (7-5), 7-6 (7-4) என்ற நேர் செட்களில் அர்ஜென்டினா வீரர் ஜுவன் மார்டின் டெல்போட்ரோவை வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் 6-7 (2-7), 7-6 (8-6), 6-2 என்ற செட் கணக்கில் சக வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவை வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அரை இறுதி ஆட்டங்களில் ஜோகோவிச் – மரின் சிலிச், பெடரர் – காபின் மோதுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories