ஆசிய கோப்பை கிரிக்கெட் : இந்தியா-ஹாங்காங் இன்று மோதல்

06 Sep14 Asia cup - 2026

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது முதல் சவாலாக இன்று கத்துக்குட்டி ஹாங்காங்கை எதிர்கொள்கிறது. பரம எதிரி பாகிஸ்தானை நாளை எதிர்கொள்ள உள்ள இந்திய அணிக்கு பயிற்சி ஆட்டமாக இன்றைய போட்டி அமைந்துள்ளது.இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இதில் துபாயில் இன்று நடக்கும் லீக் போட்டியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, ஹாங்காங் அணிகள் மோத உள்ளன. விராட் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையில் இளம் இந்திய அணி களமிறங்குகிறது.

சமீபகாலமாக இந்திய அணி மிடில் ஆர்டர் பேட்டிங்கில் பலமின்றி காணப்படுகிறது. அடுத்த ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக மிடில் ஆல்டரை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அதே போல, ‘தல’ டோனியின் பேட்டிங் செயல்பாடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. உலக கோப்பைக்கு முன்பாக இளம் விக்கெட் கீப்பர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

மேலும் டோனியை எந்த இடத்தில் களமிறங்குவது என்பதிலும் அணி நிர்வாகம் குழப்பத்திலேயே உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் தொடராக ஆசிய கோப்பை அமைந்துள்ளது. எனவே இன்றைய போட்டியிலிருந்தே பரிசோதனை முயற்சிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி, ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல், தவான், மணிஷ் பாண்டே, டோனி, கேதார் ஜாதவ், அம்பாதி ராயுடு, ஹர்திக் பாண்டியா என பலமான பேட்டிங் வரிசை கொண்டுள்ளது.காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், பும்ராவுடன் இணைந்து மீண்டும் பந்துவீச்சை தொடங்க உள்ளார். குல்தீப், சாஹல் சுழல் கூட்டணி பக்கபலமாக உள்ளது. எனவே அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே ஹாங்காங் அணியால் போட்டியின் முடிவை மாற்றி அமைக்க முடியும். அந்த அணி நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்துள்ளது. ஹாங்காங்கால் 116 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த தோல்வியிலிருந்து அடுத்த நாளே ஹாங்காங் மீண்டு வருமா என்பது சந்தேகமே.
இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆட்டமே இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டிதான். இவ்விரு அணிகளும் மோத உள்ள விறுவிறுப்பான சவால் நாளை நடக்க உள்ள நிலையில், இன்றைய போட்டி இந்திய அணிக்கு பயிற்சி ஆட்டமாகவே கருதப்படுகிறது. நல்ல பார்மில் உள்ள பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ள இந்திய அணி தனது சிறு சிறு தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories