ஆசிய கோப்பை கிரிக்கெட் : இந்தியா-ஹாங்காங் இன்று மோதல்

06 Sep14 Asia cup - 2026

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது முதல் சவாலாக இன்று கத்துக்குட்டி ஹாங்காங்கை எதிர்கொள்கிறது. பரம எதிரி பாகிஸ்தானை நாளை எதிர்கொள்ள உள்ள இந்திய அணிக்கு பயிற்சி ஆட்டமாக இன்றைய போட்டி அமைந்துள்ளது.இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இதில் துபாயில் இன்று நடக்கும் லீக் போட்டியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, ஹாங்காங் அணிகள் மோத உள்ளன. விராட் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையில் இளம் இந்திய அணி களமிறங்குகிறது.

சமீபகாலமாக இந்திய அணி மிடில் ஆர்டர் பேட்டிங்கில் பலமின்றி காணப்படுகிறது. அடுத்த ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக மிடில் ஆல்டரை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அதே போல, ‘தல’ டோனியின் பேட்டிங் செயல்பாடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. உலக கோப்பைக்கு முன்பாக இளம் விக்கெட் கீப்பர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

ALSO READ:  ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?

மேலும் டோனியை எந்த இடத்தில் களமிறங்குவது என்பதிலும் அணி நிர்வாகம் குழப்பத்திலேயே உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் தொடராக ஆசிய கோப்பை அமைந்துள்ளது. எனவே இன்றைய போட்டியிலிருந்தே பரிசோதனை முயற்சிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி, ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல், தவான், மணிஷ் பாண்டே, டோனி, கேதார் ஜாதவ், அம்பாதி ராயுடு, ஹர்திக் பாண்டியா என பலமான பேட்டிங் வரிசை கொண்டுள்ளது.காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், பும்ராவுடன் இணைந்து மீண்டும் பந்துவீச்சை தொடங்க உள்ளார். குல்தீப், சாஹல் சுழல் கூட்டணி பக்கபலமாக உள்ளது. எனவே அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே ஹாங்காங் அணியால் போட்டியின் முடிவை மாற்றி அமைக்க முடியும். அந்த அணி நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்துள்ளது. ஹாங்காங்கால் 116 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த தோல்வியிலிருந்து அடுத்த நாளே ஹாங்காங் மீண்டு வருமா என்பது சந்தேகமே.
இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆட்டமே இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டிதான். இவ்விரு அணிகளும் மோத உள்ள விறுவிறுப்பான சவால் நாளை நடக்க உள்ள நிலையில், இன்றைய போட்டி இந்திய அணிக்கு பயிற்சி ஆட்டமாகவே கருதப்படுகிறது. நல்ல பார்மில் உள்ள பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ள இந்திய அணி தனது சிறு சிறு தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  ஐபிஎல் 2026: அதிரடி ரன் குவிப்பின் ஆட்டக்களமானது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories