December 5, 2025, 5:15 PM
27.9 C
Chennai

ஆசிய கோப்பை கிரிக்கெட் : இந்தியா-ஹாங்காங் இன்று மோதல்

06 Sep14 Asia cup - 2025

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது முதல் சவாலாக இன்று கத்துக்குட்டி ஹாங்காங்கை எதிர்கொள்கிறது. பரம எதிரி பாகிஸ்தானை நாளை எதிர்கொள்ள உள்ள இந்திய அணிக்கு பயிற்சி ஆட்டமாக இன்றைய போட்டி அமைந்துள்ளது.இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இதில் துபாயில் இன்று நடக்கும் லீக் போட்டியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, ஹாங்காங் அணிகள் மோத உள்ளன. விராட் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையில் இளம் இந்திய அணி களமிறங்குகிறது.

சமீபகாலமாக இந்திய அணி மிடில் ஆர்டர் பேட்டிங்கில் பலமின்றி காணப்படுகிறது. அடுத்த ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக மிடில் ஆல்டரை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அதே போல, ‘தல’ டோனியின் பேட்டிங் செயல்பாடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. உலக கோப்பைக்கு முன்பாக இளம் விக்கெட் கீப்பர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

மேலும் டோனியை எந்த இடத்தில் களமிறங்குவது என்பதிலும் அணி நிர்வாகம் குழப்பத்திலேயே உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் தொடராக ஆசிய கோப்பை அமைந்துள்ளது. எனவே இன்றைய போட்டியிலிருந்தே பரிசோதனை முயற்சிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி, ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல், தவான், மணிஷ் பாண்டே, டோனி, கேதார் ஜாதவ், அம்பாதி ராயுடு, ஹர்திக் பாண்டியா என பலமான பேட்டிங் வரிசை கொண்டுள்ளது.காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், பும்ராவுடன் இணைந்து மீண்டும் பந்துவீச்சை தொடங்க உள்ளார். குல்தீப், சாஹல் சுழல் கூட்டணி பக்கபலமாக உள்ளது. எனவே அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே ஹாங்காங் அணியால் போட்டியின் முடிவை மாற்றி அமைக்க முடியும். அந்த அணி நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்துள்ளது. ஹாங்காங்கால் 116 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த தோல்வியிலிருந்து அடுத்த நாளே ஹாங்காங் மீண்டு வருமா என்பது சந்தேகமே.
இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆட்டமே இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டிதான். இவ்விரு அணிகளும் மோத உள்ள விறுவிறுப்பான சவால் நாளை நடக்க உள்ள நிலையில், இன்றைய போட்டி இந்திய அணிக்கு பயிற்சி ஆட்டமாகவே கருதப்படுகிறது. நல்ல பார்மில் உள்ள பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ள இந்திய அணி தனது சிறு சிறு தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories