Tag: இறுதி அஞ்சலி
-
துப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்!
வாஜ்பாய் உடலுக்கு இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை இன்று பிற்பகல் ஸ்மிருதி ஸ்தல்லில் நடைபெற்றது. இதில் பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறுதி ஊர்வலம் இன்று பிற்பகல் 2 மணிக்கு துவங்கி ஸ்மிருது ஸ்தல்லை அடைந்தது. வாஜ்பாய் உடல் சென்ற வாகனத்துடன் பிரதமர் மோடி உள்ளிட்டோர் நடைபயணமாக பங்கேற்றனர். இறுதி ஊர்வலத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா நடைபயணமாக பங்கேற்றனர். இதன் பின்னர் இறுதிச்சடங்கு நடைபெறும் ஸ்மிருதி ஸ்தல் இடத்திற்கு வாஜ்பாய் உடல்…
-
வாஜ்பாய் இறுதி யாத்திரை துவங்கியது; தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலியுடன் பிரியாவிடை!
பாரதத்தின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் துவங்கியது. அவருக்கு தொண்டர்கள் திரண்டு பிரியாவிடை அளித்தனர். 93 வயதான அடல் பிஹாரி வாஜ்பாய் நேற்று தில்லியில் காலமானார். அவரது உடல் நேற்று இரவில் தில்லி கிருஷ்ண மேனன் பார்க்கில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர் மற்றும் நாடு…
-
கருணாநிதி இறுதி அஞ்சலி: நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் 4 ஆக உயர்வு!
சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி இறுதி அஞ்சலி நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. ராஜாஜி அரங்கில் லட்சக் கணக்கானோர் அஞ்சலி செலுத்திய போது போலீசாரின் பாதுகாப்பையும் மீறி திடீரென ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மோகன் என்பவர் இன்று உயிரிழந்தார். மேலும் 7 பேர் தொடர்ந்து…
-
தலைவர் கலைஞர் -சில நேரங்களும், சில நினைவுகளும்
தலைவர் கலைஞரோடு பழகியதும், அவர் சார்ந்த நிகழ்வுகளையும் எதை சொல்ல, எதை விட என்று எனக்குத் தெரியவில்லை. 1979லிருந்து ராதா என்று அன்போடு அழைக்கும் கலைஞர் இன்றைக்கு இல்லை. ஈழப் பிரச்சனை காலத்தில் 1983, 1986 காலக்கட்டங்களில் அவரைச் சந்தித்ததும், என்னுடைய திருமணத்தை நடத்தி வைத்ததும், மதுரையில் நடந்த டெசோ மாநாடும், பிரபாகரன், விடுதலைப் புலிகளை குறித்தான அவருடைய பார்வையும், குட்டி மணி, தங்கதுரை, ஜெகன் ஆகியோரை வெலிக்கடை சிறையில் தூக்கிலிட தடுப்பதை வேண்டி அவரது பங்களிப்பும்…
-
கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்தார் மோடி
சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்துக்கு வந்த அவரை, ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். விமான நிலையத்தில் இருந்து ராஜாஜி ஹால் செல்லும் மோடி, கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
-
கோபாலபுரம், சிஐடி காலனி இரு வீடுகளிலும் ஏற்பாடுகள் தயார்..!
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரீ மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணிக்கு காலமான திமுக., தலைவர் மு.கருணாநிதியின் உடல் கோபாலபுரத்துக்கு எடுத்துச் செல்லப் படுகிறது. இதற்காக கோபாலபுரம் இல்லம் தயாராகி வருகிறது. மேலும், கனிமொழியின் சி.ஐ.டி காலனி இல்லத்திற்கு நாற்காலிகள் கொண்டு வரப்பட்டன, தி.மு.க எம்.எல்.ஏக்கள் கோபாலபுரம் வரத் தொடங்கியுள்ளனர், தி.மு.க முக்கிய நிர்வாகிகளும் கோபாலபுரம் வந்து கொண்டிருக்கின்றனர். சி.ஐ.டி காலனி மற்றும் கோபாலபுரம் கலைஞர் வீட்டு வளாகத்தில் மின்விளக்குகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. இறுதி மரியாதைக்காக ஹால் அரங்கம்…
-
ஸ்ரீதேவி உடலுக்கு நாளை ரசிகர்கள் அஞ்சலி! இறுதிச் சடங்கு குறித்த விவரத்தை அறிவித்த குடும்பத்தினர்!
செவ்வாய்க்கிழமை இன்று இரவு மும்பை கொண்டு வரப் படுகிறது. அவருக்கான இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.