கோபாலபுரம், சிஐடி காலனி இரு வீடுகளிலும் ஏற்பாடுகள் தயார்..!

Published:

karunanithi pic1 - 2026

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரீ மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணிக்கு காலமான திமுக., தலைவர் மு.கருணாநிதியின் உடல் கோபாலபுரத்துக்கு எடுத்துச் செல்லப் படுகிறது. இதற்காக கோபாலபுரம் இல்லம் தயாராகி வருகிறது. மேலும், கனிமொழியின் சி.ஐ.டி காலனி இல்லத்திற்கு நாற்காலிகள் கொண்டு வரப்பட்டன,

தி.மு.க எம்.எல்.ஏக்கள் கோபாலபுரம் வரத் தொடங்கியுள்ளனர், தி.மு.க முக்கிய நிர்வாகிகளும் கோபாலபுரம் வந்து கொண்டிருக்கின்றனர். சி.ஐ.டி காலனி மற்றும் கோபாலபுரம் கலைஞர் வீட்டு வளாகத்தில் மின்விளக்குகள் அமைக்கப் பட்டிருக்கின்றன.

இறுதி மரியாதைக்காக ஹால் அரங்கம் தயாராகி வருகிறது. இரவு 1 மணி வரை அவரது உடல் கோபாலபுரத்தில் வைக்கப் பட்டிருக்கும் என்றும், பின்னர் 3 மணி வரை சிஐடி., காலனியில் உள்ள கனிமொழியின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வைக்கப் பட்டிருக்கும் என்றும், அதன் பின்னர் அதி காலை 4 மணி அளவில் ராஜாஜி ஹாலுக்கு எடுத்துச் செல்லப் பட்டு, தலைவர்கள் தொண்டர்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img