கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப் படுவது எங்கே?

Published:

karunanithi death - 2026

சென்னை: சென்னையில் காலமான முன்னாள் முதல்வரும் திமுக., தலைவருமான கருணாநிதியின் உடல் எங்கே நல்லடக்கம் செய்யப் படும் என்பது குறித்து பேசப் பட்டு வருகிறது.

சென்னை மெரினாவில், அண்ணா சமாதி அருகே கருணாநிதிக்கும் சமாதி எழுப்பப் பட வேண்டும் என்று திமுக.,வினரும் கருணாநிதி குடும்பத்தினரும் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், மெரினாவில் இடம் ஒதுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக., அமைச்சர்களும் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கருணாநிதி உடலை அடக்கம் செய்ய ராஜாஜி, காந்தி மண்டபம், காமராஜர் நினைவகம் அருகே இடம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க இயலவில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, உடல் அடக்கம் எந்த இடத்தில் என்பது குறித்து
தமிழக அரசு இதுவரை எங்களிடம் தகவல் தரவில்லை என திமுக.,வின் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img