துப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்!

vajpayee last rites - 2026

வாஜ்பாய் உடலுக்கு இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை இன்று பிற்பகல் ஸ்மிருதி ஸ்தல்லில் நடைபெற்றது. இதில் பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறுதி ஊர்வலம் இன்று பிற்பகல் 2 மணிக்கு துவங்கி ஸ்மிருது ஸ்தல்லை அடைந்தது. வாஜ்பாய் உடல் சென்ற வாகனத்துடன் பிரதமர் மோடி உள்ளிட்டோர் நடைபயணமாக பங்கேற்றனர். இறுதி ஊர்வலத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா நடைபயணமாக பங்கேற்றனர்.

இதன் பின்னர் இறுதிச்சடங்கு நடைபெறும் ஸ்மிருதி ஸ்தல் இடத்திற்கு வாஜ்பாய் உடல் கொண்டு வரப்பட்டது. இறுதிச் சடங்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் பங்கேற்றனர்.

முப்படை வீரர்கள் வாஜ்பாய் உடலை சுமந்து வந்தனர். இதை அடுத்து வாஜ்பாய் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. ராணுவ மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது.

vajpayee sthal - 2026

பல்வேறு உலக நாடுகளின் பிரதிநிதிகளும் வாஜ்பாய் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், முப்படை தளபதிகள் வாஜ்பாய் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் விமானப்படை தலைமை தளபதி பி.எஸ்.தனோவா, கடற்படை தலைமை தளபதி சுனில் லன்பா, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோரும் தொடர்ந்து இறுதி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாஜக., தலைவர் அமித் ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

வெளிநாடுகளின் பிரதிநிதிகள், ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் உள்ளிட்டோரும் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் ருத்ர ஜெபம் முழங்க வாஜ்பாயின் உடல் தகனம் செய்யப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories