துப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்!

Published:

vajpayee last rites - 2026

வாஜ்பாய் உடலுக்கு இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை இன்று பிற்பகல் ஸ்மிருதி ஸ்தல்லில் நடைபெற்றது. இதில் பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறுதி ஊர்வலம் இன்று பிற்பகல் 2 மணிக்கு துவங்கி ஸ்மிருது ஸ்தல்லை அடைந்தது. வாஜ்பாய் உடல் சென்ற வாகனத்துடன் பிரதமர் மோடி உள்ளிட்டோர் நடைபயணமாக பங்கேற்றனர். இறுதி ஊர்வலத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா நடைபயணமாக பங்கேற்றனர்.

இதன் பின்னர் இறுதிச்சடங்கு நடைபெறும் ஸ்மிருதி ஸ்தல் இடத்திற்கு வாஜ்பாய் உடல் கொண்டு வரப்பட்டது. இறுதிச் சடங்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் பங்கேற்றனர்.

முப்படை வீரர்கள் வாஜ்பாய் உடலை சுமந்து வந்தனர். இதை அடுத்து வாஜ்பாய் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. ராணுவ மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது.

vajpayee sthal - 2026

பல்வேறு உலக நாடுகளின் பிரதிநிதிகளும் வாஜ்பாய் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், முப்படை தளபதிகள் வாஜ்பாய் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் விமானப்படை தலைமை தளபதி பி.எஸ்.தனோவா, கடற்படை தலைமை தளபதி சுனில் லன்பா, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோரும் தொடர்ந்து இறுதி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாஜக., தலைவர் அமித் ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

வெளிநாடுகளின் பிரதிநிதிகள், ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் உள்ளிட்டோரும் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் ருத்ர ஜெபம் முழங்க வாஜ்பாயின் உடல் தகனம் செய்யப் பட்டது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img