December 5, 2025, 4:39 PM
27.9 C
Chennai

புதிய தலைமைச் செயலக முறைகேடு குறித்து விசாரித்த ரகுபதி ராஜினாமா!

new secretariat building - 2025

சென்னை: புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு குறித்து விசாரித்து வந்த விசாரணை ஆணைய தலைவர் ரகுபதி ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்தார்.

முன்னதாக, கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், புதிய தலைமைs செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்த நிலையில், இதனை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ரகுபதி ஆணையத்தை சென்னை உயர் நீதிமன்றம் கலைத்து உத்தரவிட்டது.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், கடந்த திமுக ஆட்சியில் (2006-2011) புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டதால், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த ஆணையத்துக்கு திமுக சார்பில் நீதிமன்றத்தின் மூலம் கடந்த 2015ஆம் ஆண்டு தடை பெறப்பட்டது.

இந்நிலையில் புதிய தலைமைச் செயலக முறைகேடு தொடர்பாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் ஏன் அதற்கு கோடிக்கணக்கில் செலவழிக்க வேண்டும்? இத்தனை ஆண்டுகளாக அந்த ஆணையத்துக்கு அலுவலகம், ஊழியர்கள் என்று பெரும் தொகையை அரசு ஏன் செலவு செய்கிறது? மக்களின் வரிப்பணம் ஏன் வீணாகிறது என்று கேள்வி எழுப்பினார். இதை அடுத்து வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப் பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில்,  அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அமைக்கப்பட்ட ஆணையம் இது. இதனைக் கலைக்க வேண்டும் என்று திமுக., தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அரசு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி பின்னர், ரகுபதி ஆணையத்தை கலைக்க உத்தரவிட்டார்.

அடுத்த 2 வாரங்களில் (இன்று அதற்கான காலக்கெடு) அலுவலகத்தை காலி செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆவணங்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதி, தமிழகத்தில் இதுவரை செயல்படாத விசாரணை ஆணையங்கள் எவை என்பதை தமிழக அரசு கண்டுபிடித்து அவற்றை கலைக்க 4 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

விசாரணை ஆணைய நீதிபதிகள் அரசு பங்களாக்களில் தங்கியிருந்து விசாரிப்பது சரியில்லை. அரசு பங்களாக்களை காலி செய்துவிட்டு அரசு அலுவலகத்தை விசாரணைக்காக பயன்படுத்திக் கொள்ள  வேண்டும் என்று கூறியது நீதிமன்றம்!

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இன்று ரகுபதி தனது பதவியை ராஜினாமா செய்து  தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories