விஜய் சர்கார் மீது ஜெயா சர்கார் ஏன் இப்படி பொங்குகிறது..?

thalapathy 62 varalaxmi sarath kumar likely play villain vijays - 2026

விஜய் நடித்துள்ள சர்க்கார் படத்தில் வரலட்சுமி வில்லியாக நடிக்கிறார் அவருக்கு கோமளவல்லி என்று பெயர். நான் பார்த்த வகையில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் தான்! படம் பார்த்தபிறகு அந்த பெயர் என் மனதில் நிற்கவில்லை பாப்பா பாப்பா என்றுதான் படத்தில் வரும்.

மக்களுக்கே ஜெயலலிதாவின் பள்ளிப்பருவப் பெயர் கோமளவல்லி என்பது தெரியுமா என்பது சந்தேகம் தான். 1965க்கு முன்பே வெண்ணிற ஆடை படத்திலேயே அவர் ஜெயலலிதா ஆகி விட்டார்.

இப்போது சர்கார் படத்திற்கு எதிராக ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பொங்கும்போது தான் “அட, ஜெயல்லிதா பெயர் கொமலவல்லியா?” என்று மக்கள் மூக்கின் மேல் விரல் வைக்கிறார்கள்.

மந்திரிகளின் நிஜக் கோபத்திற்குக் காரணம் அதுவாக இருக்க முடியாது. ஏன் என்றால் எத்தனயோ படங்களில் கதாபாத்திரங்களுக்கு இப்படிப் பெயர் அமைந்திருக்கும்.

ஆனாலும் கோமளவல்லி என்பது ஜெ இயற்பெயர் எனவே அதை எப்படி வில்லிக்கு சூட்டலாம் என்று ஜெயக்குமார் கேள்வி கேட்கிறார்? நேற்று சில அமைச்சர்களும் அந்த கேள்வியை எழுப்பினார்கள்.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

படத்தைப் பொறுத்தவரையில் சில் அரசியல் சம்பவங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. அவ்வளவு தான். அது இன்னாரைக் குறிக்கிறது என்று நினைத்தால் யாரும் பொறுப்பு அல்ல. மேலும் தணிக்கைக்குப் பின் மந்திரிகள் மறு தணிக்கை செய்ய முயற்சிப்பது சர்க்காருக்கு இலவ்ச விளம்பரம் தான்.

சொல்லப் போனால் முதல் மந்திரி கதாபாத்திரத்தின் வாரிசாக அவரது மகள் கொண்டு வரப்படுகிறாள். அப்படிப் பார்த்தால் அது திமுகவுக்கும் பொருந்தும். ஆனால் தயாரிப்பு சன் பிக்சர்ஸ். அப்படியானால் கலைஞரின் வாரிசா ஜெயலலிதா?

எமர்ஜென்சி காலத்தில் “கிஸ்ஸா குர்ஸி கா?”படம் இந்திரா காந்தியை விமர்சிப்பதாக ஒரு சர்ச்சை சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் எழுந்தது. படச் சுருள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.

படம் வெளிவந்தபிறகு டப்பாவுக்குள் போனது வரலாறு. மொத்தத்தில் சினிமா நன்றாக இருந்தால் ஓடும். அவ்வளவு தான். இதற்கு ஏன் அரசியல்வாதிகள் பொங்குகிறார்கள்?

கருத்து: பத்திரிகையாளர் ‘தராசு’ ஷ்யாம்

ALSO READ:  அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories