அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

rss abps datrayea hosaballe - 2026
File Copy

அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் விசாரணையில் குற்றவாளிகள் என கண்டறியப் படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆர்எஸ்எஸ்., தெரிவித்துள்ளது.

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS) சர்கார்யவாஹ் (பொதுச் செயலாளர்) தத்தாத்ரேய ஹோசபாலே புது தில்லியில் ஜூலை 3 அன்று வெளியிட்ட அறிக்கை:

பல தலைமுறைகளின் போராட்டங்கள், கோடிக்கணக்கான ராம்பக்தர்களின் (பக்தர்கள்) அர்ப்பணிப்பு, தியாகம், பலிதானம் ஆகியவை காரணமாக, அயோத்தி ஸ்ரீ ராமஜன்மபூமியில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோயில், ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயத்திற்கும் மரியாதை, நம்பிக்கை, பக்தி ஆகியவற்றின் மையமாக உருவாகியுள்ளது.

ராமர் கோயிலில் வைக்கப்பட்டிருந்த காணிக்கைப் பெட்டிகளில் நடந்த துரதிர்ஷ்டவசமான திருட்டுச் சம்பவம், ஒட்டுமொத்த சமுதாயத்தின், ராமபக்தர்களின் உணர்வுகளையும் நம்பிக்கையையும் ஆழமாகப் புண்படுத்தியுள்ளது; இந்த நிகழ்வால் நாம் அனைவரும் மிகுந்த வேதனையும் கோபமும் அடைந்துள்ளோம்.

ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் வற்புறுத்தலின் பேரில், உத்தரப் பிரதேச அரசு ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்து, அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியது. விசாரணைக்குப் பிறகு குற்றவாளி எனக் கண்டறியப்படும் எவரும் கடுமையான தண்டனையை எதிர்கொள்வதை உறுதி செய்வது அவசியம்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

மிகவும் கண்டிக்கத்தக்க இந்தச் சம்பவத்தை ஒரு அசாதாரணமான விஷயமாகக் கருதி, கோயில் நிர்வாகத்திலும் செயல்பாடுகளிலும் உள்ள அனைத்துக் குறைபாடுகளையும் சரிசெய்ய அறக்கட்டளை பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கும் என்று ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் உட்பட ஒட்டுமொத்த இந்து சமூகமும் எதிர்பார்ப்பது இயல்பே.

அயோத்தி கோயில் மீது கோடிக்கணக்கான ராம பக்தர்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் பக்தியும் தளராமல் உறுதியாக நிலைத்திருப்பதை உறுதி செய்வதற்கு இது மிகவும் முக்கியம். தற்போதைய குழப்பமும் நிச்சயமற்ற தன்மையும் முடிவுக்கு வர வேண்டும். இது தொடர்பாக, கோயில் நிர்வாகமும், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவும் (SIT) தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

முறையான நிதி மேலாண்மை, குறை இல்லாத, வெளிப்படையான செயல்பாட்டு அமைப்புகள், தூய்மை, புனிதம், உண்மையான தார்மிகம் நிறைந்த சூழல் ஆகியவற்றின் மூலம், ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை ஹிந்து சமுதாயத்தின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் தொடர்ந்து வலுப்படுத்தும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

இந்தக் கடினமான தருணத்தில் தேவையான பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிக்குமாறும், இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தைப் பயன்படுத்தி ஹிந்து தர்மத்தையும் சமுதாயத்தையும் களங்கப்படுத்த முயலும் ஹிந்து விரோத, தேச விரோத சக்திகளின் சதித்திட்டங்களை முறியடிக்குமாறும் ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயத்தையும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories