அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

rss abps datrayea hosaballe - 2026
File Copy

அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் விசாரணையில் குற்றவாளிகள் என கண்டறியப் படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆர்எஸ்எஸ்., தெரிவித்துள்ளது.

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS) சர்கார்யவாஹ் (பொதுச் செயலாளர்) தத்தாத்ரேய ஹோசபாலே புது தில்லியில் ஜூலை 3 அன்று வெளியிட்ட அறிக்கை:

பல தலைமுறைகளின் போராட்டங்கள், கோடிக்கணக்கான ராம்பக்தர்களின் (பக்தர்கள்) அர்ப்பணிப்பு, தியாகம், பலிதானம் ஆகியவை காரணமாக, அயோத்தி ஸ்ரீ ராமஜன்மபூமியில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோயில், ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயத்திற்கும் மரியாதை, நம்பிக்கை, பக்தி ஆகியவற்றின் மையமாக உருவாகியுள்ளது.

ராமர் கோயிலில் வைக்கப்பட்டிருந்த காணிக்கைப் பெட்டிகளில் நடந்த துரதிர்ஷ்டவசமான திருட்டுச் சம்பவம், ஒட்டுமொத்த சமுதாயத்தின், ராமபக்தர்களின் உணர்வுகளையும் நம்பிக்கையையும் ஆழமாகப் புண்படுத்தியுள்ளது; இந்த நிகழ்வால் நாம் அனைவரும் மிகுந்த வேதனையும் கோபமும் அடைந்துள்ளோம்.

ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் வற்புறுத்தலின் பேரில், உத்தரப் பிரதேச அரசு ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்து, அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியது. விசாரணைக்குப் பிறகு குற்றவாளி எனக் கண்டறியப்படும் எவரும் கடுமையான தண்டனையை எதிர்கொள்வதை உறுதி செய்வது அவசியம்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

மிகவும் கண்டிக்கத்தக்க இந்தச் சம்பவத்தை ஒரு அசாதாரணமான விஷயமாகக் கருதி, கோயில் நிர்வாகத்திலும் செயல்பாடுகளிலும் உள்ள அனைத்துக் குறைபாடுகளையும் சரிசெய்ய அறக்கட்டளை பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கும் என்று ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் உட்பட ஒட்டுமொத்த இந்து சமூகமும் எதிர்பார்ப்பது இயல்பே.

அயோத்தி கோயில் மீது கோடிக்கணக்கான ராம பக்தர்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் பக்தியும் தளராமல் உறுதியாக நிலைத்திருப்பதை உறுதி செய்வதற்கு இது மிகவும் முக்கியம். தற்போதைய குழப்பமும் நிச்சயமற்ற தன்மையும் முடிவுக்கு வர வேண்டும். இது தொடர்பாக, கோயில் நிர்வாகமும், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவும் (SIT) தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

முறையான நிதி மேலாண்மை, குறை இல்லாத, வெளிப்படையான செயல்பாட்டு அமைப்புகள், தூய்மை, புனிதம், உண்மையான தார்மிகம் நிறைந்த சூழல் ஆகியவற்றின் மூலம், ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை ஹிந்து சமுதாயத்தின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் தொடர்ந்து வலுப்படுத்தும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

இந்தக் கடினமான தருணத்தில் தேவையான பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிக்குமாறும், இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தைப் பயன்படுத்தி ஹிந்து தர்மத்தையும் சமுதாயத்தையும் களங்கப்படுத்த முயலும் ஹிந்து விரோத, தேச விரோத சக்திகளின் சதித்திட்டங்களை முறியடிக்குமாறும் ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயத்தையும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

Entertainment News

Popular Categories