அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

rss abps datrayea hosaballe - 2026
File Copy

அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் விசாரணையில் குற்றவாளிகள் என கண்டறியப் படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆர்எஸ்எஸ்., தெரிவித்துள்ளது.

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS) சர்கார்யவாஹ் (பொதுச் செயலாளர்) தத்தாத்ரேய ஹோசபாலே புது தில்லியில் ஜூலை 3 அன்று வெளியிட்ட அறிக்கை:

பல தலைமுறைகளின் போராட்டங்கள், கோடிக்கணக்கான ராம்பக்தர்களின் (பக்தர்கள்) அர்ப்பணிப்பு, தியாகம், பலிதானம் ஆகியவை காரணமாக, அயோத்தி ஸ்ரீ ராமஜன்மபூமியில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோயில், ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயத்திற்கும் மரியாதை, நம்பிக்கை, பக்தி ஆகியவற்றின் மையமாக உருவாகியுள்ளது.

ராமர் கோயிலில் வைக்கப்பட்டிருந்த காணிக்கைப் பெட்டிகளில் நடந்த துரதிர்ஷ்டவசமான திருட்டுச் சம்பவம், ஒட்டுமொத்த சமுதாயத்தின், ராமபக்தர்களின் உணர்வுகளையும் நம்பிக்கையையும் ஆழமாகப் புண்படுத்தியுள்ளது; இந்த நிகழ்வால் நாம் அனைவரும் மிகுந்த வேதனையும் கோபமும் அடைந்துள்ளோம்.

ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் வற்புறுத்தலின் பேரில், உத்தரப் பிரதேச அரசு ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்து, அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியது. விசாரணைக்குப் பிறகு குற்றவாளி எனக் கண்டறியப்படும் எவரும் கடுமையான தண்டனையை எதிர்கொள்வதை உறுதி செய்வது அவசியம்.

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

மிகவும் கண்டிக்கத்தக்க இந்தச் சம்பவத்தை ஒரு அசாதாரணமான விஷயமாகக் கருதி, கோயில் நிர்வாகத்திலும் செயல்பாடுகளிலும் உள்ள அனைத்துக் குறைபாடுகளையும் சரிசெய்ய அறக்கட்டளை பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கும் என்று ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் உட்பட ஒட்டுமொத்த இந்து சமூகமும் எதிர்பார்ப்பது இயல்பே.

அயோத்தி கோயில் மீது கோடிக்கணக்கான ராம பக்தர்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் பக்தியும் தளராமல் உறுதியாக நிலைத்திருப்பதை உறுதி செய்வதற்கு இது மிகவும் முக்கியம். தற்போதைய குழப்பமும் நிச்சயமற்ற தன்மையும் முடிவுக்கு வர வேண்டும். இது தொடர்பாக, கோயில் நிர்வாகமும், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவும் (SIT) தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

முறையான நிதி மேலாண்மை, குறை இல்லாத, வெளிப்படையான செயல்பாட்டு அமைப்புகள், தூய்மை, புனிதம், உண்மையான தார்மிகம் நிறைந்த சூழல் ஆகியவற்றின் மூலம், ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை ஹிந்து சமுதாயத்தின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் தொடர்ந்து வலுப்படுத்தும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

இந்தக் கடினமான தருணத்தில் தேவையான பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிக்குமாறும், இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தைப் பயன்படுத்தி ஹிந்து தர்மத்தையும் சமுதாயத்தையும் களங்கப்படுத்த முயலும் ஹிந்து விரோத, தேச விரோத சக்திகளின் சதித்திட்டங்களை முறியடிக்குமாறும் ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயத்தையும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

குமரி மாவட்டத்தின் சில கடற்கரை கிராமங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் போன்ற கனிமங்கள் இயற்கையாகவே கலந்துள்ளன. இந்தக் கனிமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரணம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவாக நிரூபிக்கப்படவில்லை.

மதமாற்ற விவாதம் … மீண்டும்!

மத்திய உள்துறை அமைச்சரகம் கடந்த வாரம் வெளிநாட்டு நன்கொடை (FCRA) விதிகளில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் என் ஜி ஓ க்களின் ( அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகளை வரைமுறை படுத்துவது அதன் நோக்கம்.

Entertainment News

Popular Categories