இலங்கையில் எஞ்சியுள்ள ஒரே ஒரு தெருமூடி மடம்!

srilanka arch old 1 - 2026

இலங்கையில் இன்று எஞ்சியுள்ள ஒரேயொரு தெருமூடி மடம் பருத்தித்துறையில் காணப்படுகிறது. இந்த மடம் 1898-1901ம் ஆண்டு காலப்பகுதியில் வாழ்ந்த பிராமணரான வைத்தீஸ்வரக் குருக்களின் தகப்பனார் பஞ்சாட்சரக் குருக்கள் அவர்களால் அமைக்கப்பட்டது.

தெருவின் இரு பக்கமும் பொழிகல்லுத் திண்ணைகள் காணப் படுகின்றன. இத்தூண்களில் தெருமூடி மடம் கட்டுமானத்துடன் தொடர்பான இப்பிராமண குடும்பத்தினரின் பெயர்கள் பொறிக்கப் பட்டுள்ளன. மேற்புறம் தெருவை மூடி ஓரோடுகளால் வேயப்பட்ட கூரை காணப்பட்டது. தற்போது தட்டை ஓடுகள் போடப்பட்டுள்ளன.

srilanka arch old 2 - 2026

அந்தக் காலத்தில் தெருவில் நடைசாரியாகவும், மாட்டு வண்டிகளிலும் பயணம் செய்வோர் இளைப்பாறிச் செல்ல இந்த் மடம் உதவியாக இருந்தது. இந்த தெருமூடி மடத்தின் தெற்குப் பக்கச் சுவரில் வாசலிடப்பட்டு கதவும் இருக்கிறது. இவ்வாசல் தெற்குப் புறமாக இருந்த பிராமணரின் வீட்டுடன் தொடர்புடையதாக இருந்துள்ளது.

இராக்காலத்தில் இம்மடத்து திண்ணையில் தங்கிச் செல்லும் வழிப்போக்கர்களுக்கு சாப்பாட்டு வசதிகளை செய்து கொடுக்க பிராமணர் இந்த வாசலைப்பயன்படுத்தினார். இந்த வீட்டில் பிராமணரால் சமஸ்கிருத வகுப்புகளும் நடத்தப்பட்டுள்ளன.

srilanka arch old 3 - 2026

இந்த தெருமூடிமடத்தின் அருகில் இருக்கும் சிவன் கோவில் வீதிக்கிணறு, தண்ணீர்த் தொட்டி, ஆவுரோஞ்சிக்கல் என்பன மனிதர் குளிக்கவும், குடிக்கவும் தொட்டிகளில் வண்டி மாடுகள் தண்ணீர் குடிக்கவும், ஆவுரோஞ்சிக்கல்லில் மாடுகள் உரசி நமைச்சலைப் போக்கவும் மிகவும் கருணையோடு அமைக்கப்பட்டிருந்தன..!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories