ராகுல் காந்தி சாமியாராகி விட்டால் நாட்டுக்கு நல்லது : பொன்.ராதாகிருஷ்ணன்

கரூர் அருகே மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசிய போது, ராகுல் காந்தி சாமியார் ஆகிவிட்டால் நாட்டுக்கு நல்லது என்றார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குரும்பபட்டி பகுதியில் அனைவருக்கும் நல வாழ்வுமைய்யம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

இந்த மையத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நலவாழ்வு மையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்., மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துதுறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புதிதாகக் கட்டப்பட்ட இரண்டு கட்டிடங்களில் ஒன்றை மத்திய அமைச்சரும் மற்றொன்றை தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து சுகாதார மைய்ய வளாகத்தில் இருவரும் மரக்கன்றுளை நட்டு வைத்து நிகழ்ச்சியில் சிறப்புரை நிகழ்த்தினர்.

நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம், கரூர் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தொடர்ந்து பா.ஜ.க., திமுக கூட்டணி குறித்து கூறி வருகின்றாரே என்று கேட்டனர்.

ALSO READ:  ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

அதற்கு பதிலளித்த அவர், கூட்டணி குறித்து பேச இது உகந்த நேரமல்ல என்றும்., தேர்தல் நெருங்கி வரும் போது தான் இது குறித்து பேசுவார்கள் என்றும் கூறினார். மேலும், தம்பிதுரை நாடளுமன்றத்தின் துணை சபாநாயகர்., நல்ல மனிதர்., அவர் ஒரு கருத்து கூறுகிறார் எனபதற்காக நான் எதிர் கருத்து கூறுவது நன்றாக இருக்காது என்றார்.

Mee too மீ டூ விவகாரம் குறித்த கேள்விக்கு அது முறையான செயலாக இருக்காது என்றும் இது நமது வீட்டு பெண்களை நாம் இழிவு படுத்துவதற்கு சமம். இது ஏற்று கொள்ள முடியாது என்றார்.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி சமீப காலமாக காவி உடை தரித்து கோவில்களுக்கு சென்று வருகிறார். அவர் சாமியாராகி விடுவார் போலிருக்கிறதே என்ற செய்தியாளரின் கேள்விக்கு., அவர் சாமியார் ஆனால் நாட்டுக்கு நல்லது என்றார்.

அண்மையில் திருச்சி விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் விமான நிலையத்தின் சுற்று சுவரை இடித்து கொண்டு சென்ற விவகாரம் குறித்த கேள்விக்கு., ஒரு விதத்தில் பயணிகளை பத்திரமாக மும்பையில் கொண்டுசென்று இறக்கி விட்டுள்ளார் விமானி. அதனால் அவரை பாராட்டுகிறேன். என்றாலும் நடந்த சம்பவம் குறித்துவிசாரனை நடத்தப்பட வேண்டும் என்றார்.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories