December 5, 2025, 2:47 PM
26.9 C
Chennai

ராகுல் காந்தி சாமியாராகி விட்டால் நாட்டுக்கு நல்லது : பொன்.ராதாகிருஷ்ணன்

கரூர் அருகே மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசிய போது, ராகுல் காந்தி சாமியார் ஆகிவிட்டால் நாட்டுக்கு நல்லது என்றார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குரும்பபட்டி பகுதியில் அனைவருக்கும் நல வாழ்வுமைய்யம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

இந்த மையத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நலவாழ்வு மையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்., மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துதுறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புதிதாகக் கட்டப்பட்ட இரண்டு கட்டிடங்களில் ஒன்றை மத்திய அமைச்சரும் மற்றொன்றை தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து சுகாதார மைய்ய வளாகத்தில் இருவரும் மரக்கன்றுளை நட்டு வைத்து நிகழ்ச்சியில் சிறப்புரை நிகழ்த்தினர்.

நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம், கரூர் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தொடர்ந்து பா.ஜ.க., திமுக கூட்டணி குறித்து கூறி வருகின்றாரே என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அவர், கூட்டணி குறித்து பேச இது உகந்த நேரமல்ல என்றும்., தேர்தல் நெருங்கி வரும் போது தான் இது குறித்து பேசுவார்கள் என்றும் கூறினார். மேலும், தம்பிதுரை நாடளுமன்றத்தின் துணை சபாநாயகர்., நல்ல மனிதர்., அவர் ஒரு கருத்து கூறுகிறார் எனபதற்காக நான் எதிர் கருத்து கூறுவது நன்றாக இருக்காது என்றார்.

Mee too மீ டூ விவகாரம் குறித்த கேள்விக்கு அது முறையான செயலாக இருக்காது என்றும் இது நமது வீட்டு பெண்களை நாம் இழிவு படுத்துவதற்கு சமம். இது ஏற்று கொள்ள முடியாது என்றார்.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி சமீப காலமாக காவி உடை தரித்து கோவில்களுக்கு சென்று வருகிறார். அவர் சாமியாராகி விடுவார் போலிருக்கிறதே என்ற செய்தியாளரின் கேள்விக்கு., அவர் சாமியார் ஆனால் நாட்டுக்கு நல்லது என்றார்.

அண்மையில் திருச்சி விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் விமான நிலையத்தின் சுற்று சுவரை இடித்து கொண்டு சென்ற விவகாரம் குறித்த கேள்விக்கு., ஒரு விதத்தில் பயணிகளை பத்திரமாக மும்பையில் கொண்டுசென்று இறக்கி விட்டுள்ளார் விமானி. அதனால் அவரை பாராட்டுகிறேன். என்றாலும் நடந்த சம்பவம் குறித்துவிசாரனை நடத்தப்பட வேண்டும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories