விடுதலைப் புலிகளை அழிக்க ‘காட்டிக் கொடுத்து’ உதவியவர்கள் முஸ்லீம்கள்!: விஜய குணவர்த்தன ஒப்புதல் வாக்குமூலம்!

விடுதலைப் புலிகளை இறுதிப் போரில் அழிக்க, சிங்கள ராணுவத்துக்கு காட்டிக் கொடுத்து உதவியவர்கள் முஸ்லிம்களே என்று இலங்கை ரியல் அட்மிரல் ரவீந்திர விஜய குனவர்த்தன ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

முஸ்லிம் மக்கள் இல்லாவிட்டால் இந்த நாட்டில் யுத்தத்தை முடித்திருக்க முடியாது. முஸ்லிம் மக்கள் நமக்கு வழங்கிய உளவுத் துறை சார்ந்த மிகப்பெரிய ஒத்துழைப்பின் காரணமாகவே நம்மால் யுத்தத்தில் வெற்றிபெற முடிந்தது. எனவே அவர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலை குறித்து நான் கவலை அடைகின்றேன்… என்று கூட்டுப் படைகளின் முதன்மை ரியல் அட்மிரல் ரவிந்தீர விஜய குணவர்த்தன கூறியுள்ளார்.

kandi srilanka - 2026

கண்டி பகுதியில் அவசர நிலைப் பிரகடனம் அறிவிக்கப் பட்டுள்ளதால், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர ராணுவத்தினர் தங்களது குறைந்த பட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி, நடவடிக்கையை மேற்கொள்ள முயற்சி எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசு சார்பில் எடுக்கப் பட்ட அமைதி நடவடிக்கைகள் குறித்துக் கூறுவதற்காக, கொழும்பில் சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார் ரவீந்திர விஜய குணவர்த்தன. அப்போது அவர் கூறுகையில்,

ALSO READ:  பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

இது இனவாத வன்முறை ஆகும். யுத்தமில்லை. எனவே எங்களின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும். தற்போதுள்ள அவசரகால நிலையின் கீழ் இந்த விவகாரத்தில் தலையிட எங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எங்களுக்குள்ள குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொண்டு நிலைமையை கட்டுக்குள் வைத்திருப்போம்.

தற்போது ராணுவத்தினர் அனைத்துப் பகுதிகளிலும் களமிறக்கப் பட்டுள்ளனர். எனவே நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் ஒரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும்.

இன்று நாம் உயிரோடு இருப்பதற்குக் காரணம், யுத்தத்தின் போது முஸ்லிம் மக்கள் உயிர்த் தியாகத்துடன் நமக்கு வழங்கிய ஒத்துழைப்புதான். அவர்களின் ஒத்துழைப்பினால்தான் யுத்தத்தை முடித்தோம். முஸ்லிம் மக்களின் மொழி அறிவு நமக்கு நல்ல ஒத்துழைப்பாக இருந்தது. இன்று வீதிகளில் குண்டு வெடிக்காமல் இருப்பதற்கு முஸ்லிம் மக்களே காரணம். எனவே அவர்களின் நிலை குறித்த விவகாரத்தில் நான் கவலை அடைகிறேன்… என்று கூறியுள்ளார் இலங்கை கூட்டுப் படைகளின் தளபதி ரவீந்திர விஜய குணவர்த்தன.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories