December 5, 2025, 6:53 PM
26.7 C
Chennai

விடுதலைப் புலிகளை அழிக்க ‘காட்டிக் கொடுத்து’ உதவியவர்கள் முஸ்லீம்கள்!: விஜய குணவர்த்தன ஒப்புதல் வாக்குமூலம்!

விடுதலைப் புலிகளை இறுதிப் போரில் அழிக்க, சிங்கள ராணுவத்துக்கு காட்டிக் கொடுத்து உதவியவர்கள் முஸ்லிம்களே என்று இலங்கை ரியல் அட்மிரல் ரவீந்திர விஜய குனவர்த்தன ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

முஸ்லிம் மக்கள் இல்லாவிட்டால் இந்த நாட்டில் யுத்தத்தை முடித்திருக்க முடியாது. முஸ்லிம் மக்கள் நமக்கு வழங்கிய உளவுத் துறை சார்ந்த மிகப்பெரிய ஒத்துழைப்பின் காரணமாகவே நம்மால் யுத்தத்தில் வெற்றிபெற முடிந்தது. எனவே அவர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலை குறித்து நான் கவலை அடைகின்றேன்… என்று கூட்டுப் படைகளின் முதன்மை ரியல் அட்மிரல் ரவிந்தீர விஜய குணவர்த்தன கூறியுள்ளார்.

kandi srilanka - 2025

கண்டி பகுதியில் அவசர நிலைப் பிரகடனம் அறிவிக்கப் பட்டுள்ளதால், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர ராணுவத்தினர் தங்களது குறைந்த பட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி, நடவடிக்கையை மேற்கொள்ள முயற்சி எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசு சார்பில் எடுக்கப் பட்ட அமைதி நடவடிக்கைகள் குறித்துக் கூறுவதற்காக, கொழும்பில் சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார் ரவீந்திர விஜய குணவர்த்தன. அப்போது அவர் கூறுகையில்,

இது இனவாத வன்முறை ஆகும். யுத்தமில்லை. எனவே எங்களின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும். தற்போதுள்ள அவசரகால நிலையின் கீழ் இந்த விவகாரத்தில் தலையிட எங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எங்களுக்குள்ள குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொண்டு நிலைமையை கட்டுக்குள் வைத்திருப்போம்.

தற்போது ராணுவத்தினர் அனைத்துப் பகுதிகளிலும் களமிறக்கப் பட்டுள்ளனர். எனவே நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் ஒரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும்.

இன்று நாம் உயிரோடு இருப்பதற்குக் காரணம், யுத்தத்தின் போது முஸ்லிம் மக்கள் உயிர்த் தியாகத்துடன் நமக்கு வழங்கிய ஒத்துழைப்புதான். அவர்களின் ஒத்துழைப்பினால்தான் யுத்தத்தை முடித்தோம். முஸ்லிம் மக்களின் மொழி அறிவு நமக்கு நல்ல ஒத்துழைப்பாக இருந்தது. இன்று வீதிகளில் குண்டு வெடிக்காமல் இருப்பதற்கு முஸ்லிம் மக்களே காரணம். எனவே அவர்களின் நிலை குறித்த விவகாரத்தில் நான் கவலை அடைகிறேன்… என்று கூறியுள்ளார் இலங்கை கூட்டுப் படைகளின் தளபதி ரவீந்திர விஜய குணவர்த்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories