January 26, 2025, 6:17 PM
26.6 C
Chennai

விடுதலைப் புலிகளை அழிக்க ‘காட்டிக் கொடுத்து’ உதவியவர்கள் முஸ்லீம்கள்!: விஜய குணவர்த்தன ஒப்புதல் வாக்குமூலம்!

விடுதலைப் புலிகளை இறுதிப் போரில் அழிக்க, சிங்கள ராணுவத்துக்கு காட்டிக் கொடுத்து உதவியவர்கள் முஸ்லிம்களே என்று இலங்கை ரியல் அட்மிரல் ரவீந்திர விஜய குனவர்த்தன ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

முஸ்லிம் மக்கள் இல்லாவிட்டால் இந்த நாட்டில் யுத்தத்தை முடித்திருக்க முடியாது. முஸ்லிம் மக்கள் நமக்கு வழங்கிய உளவுத் துறை சார்ந்த மிகப்பெரிய ஒத்துழைப்பின் காரணமாகவே நம்மால் யுத்தத்தில் வெற்றிபெற முடிந்தது. எனவே அவர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலை குறித்து நான் கவலை அடைகின்றேன்… என்று கூட்டுப் படைகளின் முதன்மை ரியல் அட்மிரல் ரவிந்தீர விஜய குணவர்த்தன கூறியுள்ளார்.

கண்டி பகுதியில் அவசர நிலைப் பிரகடனம் அறிவிக்கப் பட்டுள்ளதால், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர ராணுவத்தினர் தங்களது குறைந்த பட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி, நடவடிக்கையை மேற்கொள்ள முயற்சி எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசு சார்பில் எடுக்கப் பட்ட அமைதி நடவடிக்கைகள் குறித்துக் கூறுவதற்காக, கொழும்பில் சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார் ரவீந்திர விஜய குணவர்த்தன. அப்போது அவர் கூறுகையில்,

ALSO READ:  சபரிமலை: குறையாத கூட்டம்! அகலாத குறைகள்! குமுறும் பக்தர்கள்!

இது இனவாத வன்முறை ஆகும். யுத்தமில்லை. எனவே எங்களின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும். தற்போதுள்ள அவசரகால நிலையின் கீழ் இந்த விவகாரத்தில் தலையிட எங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எங்களுக்குள்ள குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொண்டு நிலைமையை கட்டுக்குள் வைத்திருப்போம்.

தற்போது ராணுவத்தினர் அனைத்துப் பகுதிகளிலும் களமிறக்கப் பட்டுள்ளனர். எனவே நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் ஒரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும்.

இன்று நாம் உயிரோடு இருப்பதற்குக் காரணம், யுத்தத்தின் போது முஸ்லிம் மக்கள் உயிர்த் தியாகத்துடன் நமக்கு வழங்கிய ஒத்துழைப்புதான். அவர்களின் ஒத்துழைப்பினால்தான் யுத்தத்தை முடித்தோம். முஸ்லிம் மக்களின் மொழி அறிவு நமக்கு நல்ல ஒத்துழைப்பாக இருந்தது. இன்று வீதிகளில் குண்டு வெடிக்காமல் இருப்பதற்கு முஸ்லிம் மக்களே காரணம். எனவே அவர்களின் நிலை குறித்த விவகாரத்தில் நான் கவலை அடைகிறேன்… என்று கூறியுள்ளார் இலங்கை கூட்டுப் படைகளின் தளபதி ரவீந்திர விஜய குணவர்த்தன.

ALSO READ:  பிரதமர், ஆளுநர் தமிழில் பொங்கல் வாழ்த்து!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IND Vs ENG T20: 2வது போட்டியிலும் இந்திய அணி த்ரில் வெற்றி

இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டி-20 ஆட்டம்- சென்னை-25 ஜனவரி 2025இரண்டாவதிலும் வெற்றிமுனைவர்...

Padma Awards 2025

Padma Awards - one of the highest civilian Awards of the country, are conferred in three categories, namely, Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri.

தமிழகத்தைப் பற்றிய கவலைகள்; ஒட்டுமொத்தமாக வெளியிட்ட ஆளுநர் ரவி!

தமிழகத்தைப் பற்றிய பல்வேறு கவலைகளை வெளியிட்டார். குறிப்பாக, தமிழகத்தின் எதிர்காலம் சார்ந்து அவர் வெளியிட்ட கவலைகள் பெரும் கவனத்துக்கு உரியவை.

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று