இந்தியாவில் இப்போதுள்ள மத சகிப்புத்தன்மையை அறிந்தால் மகாத்மா காந்தி அதிர்ச்சி அடைவார்: பராக் ஒபாமா

obamaவாஷிங்டன்: இந்தியாவில் தற்போதுள்ள மத சகிப்புத் தன்மை நடவடிக்கைகள் குறித்து அறிந்தால், மகாத்மா காந்தி அதிர்ச்சி அடைவார் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வியாழக்கிழமை தெரிவித்தார். அண்மையில் பராக் ஒபாமா இந்தியா வந்திருந்தபோது, தில்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத சகிப்புத் தன்மை குறித்து ஓரிரு வார்த்தைகள் பேசியிருந்தார். இது இந்தியாவில் எதிர்க்கட்சியினர் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது. ஆளும் பாஜகவைக் குறிவைத்து, ஒபாமா இப்படிப் பேசியதாகக் கூறப்பட்டது. இது குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக வெள்ளை மாளிகை அதனை மறுத்திருந்தது. ஒபாமா, இந்தியா மற்றும் அமெரிக்கா இரண்டுக்கும் பொதுவான ஜனநாயக மதிப்பு மற்றும் கொள்கைகள் குறித்தே பேசினார் என்று  விளக்கம் அளித்தது. இந்நிலையில், ஒபாமா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது…. ”மிகவும் அழகான செழுமையான நாடான இந்தியாவில் இருந்து நானும் மிச்செலும் இப்போதுதான் திரும்பியிருக்கிறோம். முற்றிலும் வேறுபாடுகளைக் கொண்ட ஒரு நாடு. ஆனால்,  பல்வேறு மத நம்பிக்கைகள் கொண்ட ஒரு இடமான அங்கு கடந்த சில வருடங்களாக, சில நேரங்களில் வேறு சில மத நம்பிக்கைகள் கொண்டவர்கள் மற்றவர்கள் தாக்கப்படுவது நடந்துள்ளது. தங்கள் பழைமையையும் கலாசாரத்தையும் நம்பிக்கைகளையும் தக்க வைக்க அவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றனர். இந்த மத சகிப்புத் தன்மையின் நிலை குறித்து அறிந்தால், அந்த தேசத்தின் விடுதலைக்கு உதவிய மகாத்மா காந்தி அதிர்ச்சி அடைவார்” என்று கூறியுள்ளார். வியாழக்கிழமை நேற்று அமெரிக்க அதிபர் மாளிகையில் மூவாயிரத்துக்கும் அதிகமான சர்வதேசப் பிரமுகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் அதிபர் ஒபாமா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கடந்த மாதம் 26ம் தேதியை ஒட்டி, மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார் ஒபாமா. குடியரச தின விழாவில் பங்கேற்ற பின்னர் 27-ம் தேதி தில்லியில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அனைவரும் தங்களின் மத நம்பிக்கைகளை தடையின்றி தொடரவும், அவற்றை விரிவாக்கவும் இந்திய அரசியல் சட்டம் சுதந்திரம் அளிக்கிறது. இந்தியா – அமெரிக்கா மட்டுமின்றி, அனைத்து நாடுகளுக்கும் மத சுதந்திரத்தை பேணிக் காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. அது ஒவ்வொருவரின் கடமையும்கூட!” என்றார். இந்நிலையில், நேற்று அதிபர் மாளிகையில் நடந்த  நிகழ்ச்சியில் இவ்வாறு பேசியுள்ளார் ஒபாமா. ஆனால், குறிப்பிட்ட எந்த மதத்தைக் குறித்தும் அவர் கூறவில்லை; வன்முறை என்பது குறிப்பிட்டக் குழுவுக்குமோ, ஒரு மதத்துக்குமோ உரியது அல்ல என்றும் கூறியுள்ளார். மேலும், சிலுவையின் பெயரால் நடைபெற்ற கொடூரச் செயல்கள் குறித்தும் அவர் தன் பேச்சில் சுட்டிக் காட்டியுள்ளார். மத சகிப்புத் தன்மை இன்றி, வெறுப்பை வளர்க்கும் குழுக்கள் தங்களுக்கென்று டிவிட்டர் முதலிய சமூக வலைத்தளங்கள் மூலம் உலகெங்கும் தொடர்பு கொண்டு வெறுப்பினை இணையதளங்களில் விதைக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார் ஒபாமா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

Topics

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Entertainment News

Popular Categories