இந்தியாவில் இப்போதுள்ள மத சகிப்புத்தன்மையை அறிந்தால் மகாத்மா காந்தி அதிர்ச்சி அடைவார்: பராக் ஒபாமா

obamaவாஷிங்டன்: இந்தியாவில் தற்போதுள்ள மத சகிப்புத் தன்மை நடவடிக்கைகள் குறித்து அறிந்தால், மகாத்மா காந்தி அதிர்ச்சி அடைவார் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வியாழக்கிழமை தெரிவித்தார். அண்மையில் பராக் ஒபாமா இந்தியா வந்திருந்தபோது, தில்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத சகிப்புத் தன்மை குறித்து ஓரிரு வார்த்தைகள் பேசியிருந்தார். இது இந்தியாவில் எதிர்க்கட்சியினர் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது. ஆளும் பாஜகவைக் குறிவைத்து, ஒபாமா இப்படிப் பேசியதாகக் கூறப்பட்டது. இது குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக வெள்ளை மாளிகை அதனை மறுத்திருந்தது. ஒபாமா, இந்தியா மற்றும் அமெரிக்கா இரண்டுக்கும் பொதுவான ஜனநாயக மதிப்பு மற்றும் கொள்கைகள் குறித்தே பேசினார் என்று  விளக்கம் அளித்தது. இந்நிலையில், ஒபாமா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது…. ”மிகவும் அழகான செழுமையான நாடான இந்தியாவில் இருந்து நானும் மிச்செலும் இப்போதுதான் திரும்பியிருக்கிறோம். முற்றிலும் வேறுபாடுகளைக் கொண்ட ஒரு நாடு. ஆனால்,  பல்வேறு மத நம்பிக்கைகள் கொண்ட ஒரு இடமான அங்கு கடந்த சில வருடங்களாக, சில நேரங்களில் வேறு சில மத நம்பிக்கைகள் கொண்டவர்கள் மற்றவர்கள் தாக்கப்படுவது நடந்துள்ளது. தங்கள் பழைமையையும் கலாசாரத்தையும் நம்பிக்கைகளையும் தக்க வைக்க அவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றனர். இந்த மத சகிப்புத் தன்மையின் நிலை குறித்து அறிந்தால், அந்த தேசத்தின் விடுதலைக்கு உதவிய மகாத்மா காந்தி அதிர்ச்சி அடைவார்” என்று கூறியுள்ளார். வியாழக்கிழமை நேற்று அமெரிக்க அதிபர் மாளிகையில் மூவாயிரத்துக்கும் அதிகமான சர்வதேசப் பிரமுகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் அதிபர் ஒபாமா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கடந்த மாதம் 26ம் தேதியை ஒட்டி, மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார் ஒபாமா. குடியரச தின விழாவில் பங்கேற்ற பின்னர் 27-ம் தேதி தில்லியில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அனைவரும் தங்களின் மத நம்பிக்கைகளை தடையின்றி தொடரவும், அவற்றை விரிவாக்கவும் இந்திய அரசியல் சட்டம் சுதந்திரம் அளிக்கிறது. இந்தியா – அமெரிக்கா மட்டுமின்றி, அனைத்து நாடுகளுக்கும் மத சுதந்திரத்தை பேணிக் காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. அது ஒவ்வொருவரின் கடமையும்கூட!” என்றார். இந்நிலையில், நேற்று அதிபர் மாளிகையில் நடந்த  நிகழ்ச்சியில் இவ்வாறு பேசியுள்ளார் ஒபாமா. ஆனால், குறிப்பிட்ட எந்த மதத்தைக் குறித்தும் அவர் கூறவில்லை; வன்முறை என்பது குறிப்பிட்டக் குழுவுக்குமோ, ஒரு மதத்துக்குமோ உரியது அல்ல என்றும் கூறியுள்ளார். மேலும், சிலுவையின் பெயரால் நடைபெற்ற கொடூரச் செயல்கள் குறித்தும் அவர் தன் பேச்சில் சுட்டிக் காட்டியுள்ளார். மத சகிப்புத் தன்மை இன்றி, வெறுப்பை வளர்க்கும் குழுக்கள் தங்களுக்கென்று டிவிட்டர் முதலிய சமூக வலைத்தளங்கள் மூலம் உலகெங்கும் தொடர்பு கொண்டு வெறுப்பினை இணையதளங்களில் விதைக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார் ஒபாமா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories