அதிபராக இருந்தவர்… பிரதமர் ஆனார்! கூட்டணிப் பிளவால்.. ஆட்சியில் ராஜபட்ச!

Mahinda Rajapaksa Sworn In As Sri Lankas New Prime Minister - 2026

கொழும்பு: ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட பிளவை அடுத்து இலங்கை பிரதமராகப் பதவி ஏற்றார் மகிந்த ராஜபட்ச. இலங்கை அரசியலில் ஏற்பட்ட பரபரப்பு திருப்பமாக, பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டார். புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபட்ச பதவி ஏற்றார்.

இலங்கையில் 2015 இல் நடைபெற்ற தேர்தல் ராஜபட்சவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், மைத்ரீபால சிறீசேனவின் இலங்கை சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தன. சிறீசேன அதிபராகவும், ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் பதவி ஏற்றனர்.

இந்நிலையில், அண்மைக் காலமாகவே அதிபர், பிரதமர் இருவருக்கும் இடையில் பிணக்குகள் அதிகரித்தன. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்த நிலையில், வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டது இந்தக் கூட்டாட்சியில் அங்கம் வகித்த மகிந்த ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு!

ரணில் தலைமையிலான அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், அரசில் இருந்து வெளியேறுவதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மகிந்த அமரவீர வெள்ளிக்கிழமை மாலை அறிவித்தார். இதனால் இலங்கை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. சபாநாயகர் கரு ஜயசூரியாவிடம் எழுத்து மூலம் வாபஸ் பெறும் கடிதத்தைக் கொடுத்து விட்டதாக அமரவீர தெரிவித்தார்.

ALSO READ:  பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் இலங்கை புதிய பிரதமராக மகிந்த ராஜபட்ச பதவி ஏற்றார். அவருக்கு அதிபர் சிறீசேன பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வரும் நவ.5ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது. அதில் ராஜபட்ச பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், இலங்கை அரசியலில் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசியல் அமைப்பு சட்டம் 19ஆவது பிரிவின் படி ஆட்சியில் உள்ள பிரதமரை நீக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என்றும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தால் மட்டுமே பிரதமர் பதவி இழக்க நேரிடும் என்றும் ரணில் விக்ரமசிங்க கட்சியினர் கூறுகின்றனர். வாபஸ் பெற்ற காரணத்தாலேயே பெரும்பான்மை இருக்கிறதா என்பதை அறியாமல், பிரதமரை பதவி நீக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை என்று கூறுவதால், இலங்கையில் அரசியல் சட்ட சிக்கல் எழுந்துள்ளது. மேலும், அதிபர் சிறீசேன முடிவுக்கு இலங்கை அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், இலங்கையில் இன்று திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories