இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம் செய்யப் பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவசர நிலையையும் அறிவித்தார் அதிபர் சிறீசேன.
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்று தொடர் குண்டுவெடிப்பு நிகழ்வுகள் நடைபெற்றதை அடுத்து இலங்கை அதிபர் மைத்திரீபால சிறீசேன இந்த அவசர நிலை பிரகடன அறிவிப்பை வெளியிட்டார்
இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஊடகங்கள் அரசியல் கட்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அசாதாரண சூழலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்த அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன விளக்கமளித்துள்ளார்.