நள்ளிரவு நேரம் என்பதால் குழந்தைகள் அனைவரும் தூக்கத்திலிருந்துள்ளனர். தீப்பற்றி எரிந்ததைக் கண்டு 12 வயது சிறுவர்கள் இருவர் அங்குள்ளவர்களை எழுப்ப முயற்சி செய்துள்ளனர்.அவர்களால் இயன்றவரை அங்கிருந்த குழந்தைகளை வெளியேற்றியுள்ளனர்.
உடனே அருகில் இருந்தவர்கள் தீயை அணைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர். காப்பகத்தின் முதல் தளத்திற்கு செல்ல முயற்சிக்கையில் அங்கு வெப்பப்புகை சூழ்ந்ததால் யாரும் அப்பகுதிக்குச் செல்ல முடியவில்லை.
இந்த தீ விபத்தில் 5 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் சுமார் 8 மாதம் முதல் 7 வயது வரை உள்ள குழந்தைகள் என தெரிய வந்தது. மற்றும் அந்த காப்பகத்தில் இருந்து பெண் ஒருவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாகவும் காயமடைந்த மற்ற குழந்தைகளை காவல்துறையினர் பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறனர்.
அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நள்ளிரவில் காப்பகத்தில் தீ விபத்து ஏற்பட என்ன காரணம்? மின்சார கசிவு காரணமாக இருக்குமோ? அல்லது சமையலறையில் சரியாக அடுப்பைப் அணைக்காமல் விட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்குமோ? என காவல்துறையினர் இரு தரப்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.