December 6, 2025, 3:10 AM
24.9 C
Chennai

காதலர் தினத்தில் நடிகர் யுதன் பாலாஜிக்கு நேர்ந்த சோகம்!

சென்னை:

காதலர் தினம் என்று பலரும் கை கோக்கும் நாளில் தன் காதல் மனைவியுடன் விவாகரத்து பெற்று சோகத்தில் ஆழ்ந்துள்ளார் நடிகர் யுதன் பாலாஜி.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர் பாலாஜி. பள்ளி மாணவர்களின் பதின்ம வயதுகளை எடுத்துக் கூறிய இந்த நாடகம் இளைய தலைமுறையிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து பட்டாளம் படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் பாலாஜி அறிமுகமானார். தனி ஹீரோவாக பாலாஜி நடித்து வெளியான படம் காதல் சொல்ல வந்தேன்.

இதில் தன்னைவிட வயது அதிகமான பெண்ணை காதலிக்கும் மாணவராக நடித்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இதனால் சோலோ ஹீரோவாக இல்லாமல் ஓரளவு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்து வந்தார்.

இவருக்கு ப்ரீத்தி என்பவருடன் 2016 ஜூனில் திருமணம் ஆனது. திருமணமாகி 2 வருடங்கள் கூட கடக்காத நிலையில், மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். தொடர்ந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், நீதிமன்றம் அவர்களுக்கு நேற்று விவாகரத்து அளித்தது. இந்தத் தகவலை யுதன் பாலாஜி தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

காதலர் தினத்தன்று என்ன திட்டம் என அனைவரும் என்னிடம் கேட்கின்றனர். ஆனால், கடவுள் எனக்கு வேறு திட்டத்தை கொடுத்துள்ளார். நீதிமன்றம் எனக்கு விவாகரத்து அளித்துள்ளது என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories