சலீம் படத்தை இயக்கிய நிர்மல் குமார், அடுத்து சசிகுமார், சரத்குமார் இணைந்து நடிக்கும் படத்தை இயக்குகிறார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.மோகன்ராம் தயாரிக்கிறார். ஹர்ஷா வர்தன் ராமேஷ்வர் என்பவர் இசை அமைக்கிறார்,
கணேஷ் சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.இப்படத்திற்கு ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. இந்நிலையில் இதன் படப்பிடிப்புகள் மும்பையில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் சரத்குமார், சசிகுமார் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. சரத்குமார் வில்லனாக நடிக்கிறார்.
மும்பையில் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடக்கிறது. படத்திற்கு நா நா என்று தலைப்பு வைத்து, முதல் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.


