நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் கோலாகலம்! லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்!

nellaiappar ani ther - 2026

514 ஆண்டுகள் தடையின்றி மனித சக்தியால் மட்டுமே இழுக்கப்படும் உலகின் மிகப்பெரிய தேர் அருள்மிகு நெல்லையப்பர் திருத்தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்

மிகவும் பாரம்பரியமான திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார்.

தென்தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற சிவாலயங்களில் ஒன்று, திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில்! இக்கோயிலின் ஆனித் தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது,

nellaiappar ani ther1 - 2026நெல்லையப்பர் கோயில் இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த திருத்தலம். இக்கோயிலில் ஆனித் தேர்த் திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அன்பர்களுக்கு திருக்காட்சி அளித்தனர்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

ஆனித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக் கிழமை இன்று காலை 8.30 மணி அளவில் தொடங்கியது. இந்த விழாவில் கலந்து கொள்ள சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக நெல்லை மாவட்ட ஆட்சியரும் இதில் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தார்.

nellaiappar ther - 2026நெல்லையப்பர் திருவீதி உலா வரும் நான்கு ரத வீதிகளிலும் வண்ணக் கோலங்களால் நெல்லையப்பர் உடனுறை காந்திமதி அம்மனுக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

நெல்லையப்பர் கோயிலின் திருத்தேர், தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரும் தேர். சுமார் 450 டன் எடையில் முற்றிலும் மனித சக்தியால் மட்டுமே இழுக்கப்படும் பெருமை பெற்றது. சுமார் 515 ஆண்டுகளாக தங்கு தடையின்றி நடைபெறும் உலகின் மிகப் பழைமையான தேரோட்டம் நெல்லையில் நடைபெறும் நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்தான்! கடந்த 1505ஆம் ஆண்டு முதல் நெல்லையப்பரின் தேரோட்டம் இடைவிடாமல் நடந்து வருவது வரலாற்றுச் சான்றுகளால் விளங்கும்!

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories