நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் கோலாகலம்! லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்!

nellaiappar ani ther - 2026

514 ஆண்டுகள் தடையின்றி மனித சக்தியால் மட்டுமே இழுக்கப்படும் உலகின் மிகப்பெரிய தேர் அருள்மிகு நெல்லையப்பர் திருத்தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்

மிகவும் பாரம்பரியமான திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார்.

தென்தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற சிவாலயங்களில் ஒன்று, திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில்! இக்கோயிலின் ஆனித் தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது,

nellaiappar ani ther1 - 2026நெல்லையப்பர் கோயில் இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த திருத்தலம். இக்கோயிலில் ஆனித் தேர்த் திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அன்பர்களுக்கு திருக்காட்சி அளித்தனர்.

ALSO READ:  'தாமரை வாக்குறுதிகள்' என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

ஆனித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக் கிழமை இன்று காலை 8.30 மணி அளவில் தொடங்கியது. இந்த விழாவில் கலந்து கொள்ள சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக நெல்லை மாவட்ட ஆட்சியரும் இதில் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தார்.

nellaiappar ther - 2026நெல்லையப்பர் திருவீதி உலா வரும் நான்கு ரத வீதிகளிலும் வண்ணக் கோலங்களால் நெல்லையப்பர் உடனுறை காந்திமதி அம்மனுக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

நெல்லையப்பர் கோயிலின் திருத்தேர், தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரும் தேர். சுமார் 450 டன் எடையில் முற்றிலும் மனித சக்தியால் மட்டுமே இழுக்கப்படும் பெருமை பெற்றது. சுமார் 515 ஆண்டுகளாக தங்கு தடையின்றி நடைபெறும் உலகின் மிகப் பழைமையான தேரோட்டம் நெல்லையில் நடைபெறும் நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்தான்! கடந்த 1505ஆம் ஆண்டு முதல் நெல்லையப்பரின் தேரோட்டம் இடைவிடாமல் நடந்து வருவது வரலாற்றுச் சான்றுகளால் விளங்கும்!

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

Entertainment News

Popular Categories