காங்கிரஸில் பாஜக., ஏதும் ஸ்லீப்பர் செல்களைப் பெற்றிருக்கிறதா? ஒமர் அப்துல்லா கேள்வி!

Omar abdullah - 2026

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் விலாஸ்ராவ் முத்தம்வர் என்பவர், மோடியின் தந்தை பெயர் என்ன என்று யாருக்காவது தெரியுமா என்று கேள்வி எழுப்பி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.

பிரதமர் மோடி குறித்து காங்கிரஸின் மூத்த தலைவர்கள் தரம் கெட்ட வகையில் பேசி வருவது தொடர்கதையாகி விட்டது. காங்கிரஸின் மூத்த தலைவர் ராஜ் பாபர், சி.பி.ஜோஷியைத் தொடர்ந்து விலாஸ்ராவ் முத்தம்வரும் சர்ச்சைக்குரிய வகையில் மோடியைத் தாக்கிப் பேசியுள்ளார். ஆனால் இவ்வாறான பேச்சுக்களெல்லாம் அறிவுகெட்ட தனம்தான் வேறில்லை என்று கூறியுள்ள காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, காங்கிரஸில் தன் ஸ்லீப்பர் செல்களை பாஜக., பெற்றிருக்கிறதா என்ன? என்று ஆச்சரியப்பட்டுள்ளார்.

இது குறித்து செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ள ஒமர் அப்துல்லா, இந்தக் கேள்வியை தனது டிவிட்டர் பக்கத்திலும் எழுப்பியுள்ளார்.

5 மாநில சட்டசபை தேர்தலை ஒட்டி பாஜக., மற்றும் காங்கிரஸ் தரப்பில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நடிகருமான ராஜ் பாப்பர், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பிரதமர் மோடியின் தாயினுடைய வயதை விரைவில் தொட்டு விடும்’ என்று பேசினார். இதற்கு மறைமுகமாக பதிலளித்த மோடி, காங்கிரசுக்கு என்னை எதிர்க்க திராணியில்லை அதனால்தான் என் தாய் பற்றி பேசுகின்றனர்’ எனக் கூறினார்.

ALSO READ:  தகுந்த வைத்தியம் தேவை!

தொடர்ந்து, காங்கிரஸின் மூத்த தலைவறான சி.பி.ஜோஷி, பிராமணர்கள் மட்டுமே ஹிந்து மதம் பற்றி பேச வேண்டும். மோடி, உமா பாரதி போன்றவர்கள் பேசக் கூடாது’ எனக் கூறினார். இவரது ஜாதி ரீதியான பேச்சுக்கு பாஜக.,வில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் இந்த விவகாரத்தில் தலையிட்டு ஜோஷியை வருத்தம் தெரிவிக்க வைத்தார்.

இப்போது மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸின் மூத்த தலைவர் முன்னாள் மத்திய இணை அமைச்சர், விலாஸ்ராவ் முத்தம்வர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது. பாஜக.,வின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் பொறுப்பாளர் அமித் மால்வியா டுவிட்டரில் வெளியிட்ட அந்த வீடியோவில், ”ராகுல் அரசியலுக்கு வரும் முன்பே, அவரது ஐந்து தலைமுறைகள் குறித்து மக்களுக்கு தெரியும். அவரது தந்தை ராஜிவ் என்பதும், அவரது பாட்டி இந்திரா என்பதும், அவரது கொள்ளுத் தாத்தா ஜவாஹர்லால் நேரு என்பதும் மக்களுக்கு தெரியும். ஆனால், இந்த நரேந்திரா (மோடி)! அவரது தந்தை யார் என்பது இது நாள் வரை யாருக்கும் தெரியாது’ எனப் பேசியுள்ளார்.

ALSO READ:  சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

Omar abdullahtweet - 2026

இந்த வீடியோ இப்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை கண்டித்தே, ஒமர் அப்துல்லா ஸ்லீப்பர் செல் குறித்து பேசியுள்ளார்.

தமிழகத்தில் டிடிவி தினகரன் மூலம் மட்டுமே ஸ்லீப்பர்செல்கள் குறித்து அறிந்தனர் தமிழக மக்கள்! இப்போது, ஒமர் அப்துல்லா மூலம், தேசிய அளவில் தெரியும் சொல் ஆகிவிட்டிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories