கடவுளாக வந்து திருமணத்தை நடத்தி வைத்தீர்கள்: இந்துக்களிடம் இஸ்லாமியர் நெகிழ்ச்சி!

marriage - 2026

50 க்கும் மேற்பட்ட இந்துக்கள் இணைந்து மனிதசங்கிலி அமைத்து, இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அளித்து திருமணத்தை நடத்தி வைத்த சம்பவம் உ.பி., மாநிலம் கான்பூரில் நடந்துள்ளது.

கான்பூரின் பகர்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ஜீனத் (25). 12 வயதில் தந்தையை இழந்த இவருக்கு நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு, பிரதாப்கரை சேர்ந்த ஹஸ்னைன் பரூக்கி என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்கள் இருவருக்கும் டிச.,21 ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அன்று அதிகாலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டம் மற்றும் வன்முறையில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதால் ஊரே உச்சகட்ட பதற்றத்தில் இருந்தது.

போலீஸ், துணை ராணுவமும் குவிக்கப்பட்டிருந்தது.நிலைமை மோசமாக இருந்த சமயத்தில் ஒரு கி.மீ., தூரத்தில் உள்ள திருமணம் நடைபெறும் இடத்திற்கு செல்ல முடியாமல் பெண் வீட்டார் பயத்தில் இருந்தனர்.

ஜீனத்தின் உறவினர் மாப்பிள்ளை வீட்டார் மற்றும் உறவினர்களிடம் ஆலோசித்து, ஏறக்குறைய திருமணத்தை நிறுத்தும் முடிவுக்கு வந்து விட்டனர். அனைவரும் வழியின்றி தவித்துக் கொண்டிருந்த போது, இந்த தகவல் அக்கம் பக்கத்தில் பரவியது.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

இதை அறிந்த அதே பகுதியை சேர்ந்த விமல் சபாதியா என்பவர் தனது நண்பர்களான சோம்நாத் திவாரி மற்றும் நீரஜ் திவாரி ஆகியோரிடம் பேசி உள்ளார்.

மாப்பிள்ளை வீட்டாரிடமும் பேசி திருமண ஏற்பாடுகளை நிறுத்த வேண்டாம் என கூறி உள்ளார்.”கவலைப்படாதீர்கள். நாங்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறோம்” என அவர்கள் பெண் வீட்டாருக்கு நம்பிக்கை அளித்தனர்.

சிறிது நேரத்தில் மினி பஸ் மற்றும் கார்களில் வந்த 70 இந்துக்கள் ஒன்றிணைந்து, மனிதசங்கிலி அமைத்து, பெண் வீட்டாரை பத்திரமாக திருமணம் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று, திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.
திருமணம் முடிந்து மீண்டும் வீட்டிற்கு வந்த ஜீனத், விமல் மற்றும் அவரது நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து, ஆசி பெற்று சென்றுள்ளார்.

பதற்றமான நிலையால் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தும் முடிவுக்கு வந்ததால், திருமணம் நடக்காது என்ற நம்பிக்கை இழந்திருந்த தனக்கு திருமணத்தை கடவுளைப் போல் வந்து நடத்தி வைத்த சகோதர்களை மறக்க முடியாது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் ஜீனத்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

இச்சம்பவம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகி உள்ள நிலையில் விமல் மற்றும் அவரது நண்பர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories