முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய் குரைஷி வியாழக்கிழமை நேற்று பிரதமர் மோடிக்கு உலகம் முழுதும் பரவி வரும் உயிர்க்கொல்லி தொற்றுநோயான கொடிய கோவிட் -19 கொரோனா வைரஸ் சோதனை நடத்தி அது உறுதிசெய்யப்பட வேண்டும் என்ற தன் ஆசையை வெளிப்படுத்தினார்.
இஸ்லாமியவாதியான குரோஷி, வியாழக்கிழமை நேற்று, சமூக ஊடகங்களில் ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார். .அதில், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, தனக்கு கொடிய கொரோனா வைரஸ் தொற்று குறித்து பரிசோதித்துள்ளார் என்ற செய்தியைப் பகிர்ந்து கொண்டார். இதனை எங்கோ தேடி எடுத்து பகிர்ந்து கொண்ட தீவிர இஸ்லாமியவாதியான குரேஷி, குடியரசு தின கொண்டாட்டத்தின் போது சமீபத்தில் பிரேசில் அதிபர் போல்சனாரோவை சந்தித்த பிரதமர் மோடியும், தொற்று நோய் குறித்து சோதிக்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
ஜெய்ர் போல்சனாரோ, தனது செயலாளர் ஃபேபியோ வஜ்ஜார்டன்க்கு பரிசோதித்து பாஸிட்டிவ் என்ற முடிவுகள் வந்த பின்னர் தானும் வைரஸுக்கு பரிசோதனை செய்து கொண்டுள்ளார். போல்சனாரோவின் சோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.
பொதுவாக, பாரதப் பிரதமர் மோடி, ஏதாவது சந்தர்ப்பத்தில் உடல் நலன் குன்றி காணப்படுகிறார் என்ற செய்தி வெளியில் வந்தாலே போதும்…. தீவிர இஸ்லாமியவாதிகள் உற்சாகமடைகின்றனர். இவ்வாறான நிகழ்வைப் பார்ப்பது ஒன்றும் புதிது அல்ல என்றாலும், அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய் குரைஷியும் பிரதமர் நோய்வாய்ப்பட விரும்பும் ஒரு இஸ்லாமியராக மாறிவிட்டார் என்பதுதான்! குறிப்பாக, மோசமான எண்ணத்தை வெளிப்படுத்திய ட்வீட்டை குரைஷி ரீட்வீட் செய்தார்.
குரைஷி ஒரு ‘மதச்சார்பற்ற’ முகத்தை வைத்துக் கொண்டு அவரது வெளிப்புற அடையாளத்தால் அடிக்கடி பாராட்டப்பட்டவர், ஆனால் தற்போதைய அவரது டிவீட் அவரது முகமூடிகளைக் கழற்றிவிட்டுள்ளது.
ஒரு திறமையான முஸ்லீமான குரைஷி, பிரதமர் மோடிக்கு கொரோனா வைரஸ் மூலம் மரணத்தை விரும்புவதை ட்வீட் செய்ததன் மூலம் தனது இஸ்லாமிய உள்மனத்தை வெளிப்படையாக வெளிப்படுத்த முடிவு செய்துள்ளார். ஆனால் ஒரு காலத்தில் இந்தியாவின் தேர்தல் ஆணையத்திற்கு குரைஷி போன்றவர்தான் பொறுப்பேற்று வழிநடத்தியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளும்போது, கவலையளிக்கிறது!
அந்நாட்களில் ‘நடுநிலை’ என்று பாசாங்கு செய்த இந்த “அறிவுஜீவிகள்” பிரதமர் மோடி குறித்த மரண ஆசை அவர்களின் உள்நோக்கத்தைக் காட்டிக் கொடுக்கிறது. அறிவுஜீவிகள் என்று அழைக்கப்படுபவர்கள், பாரம்பரியமாக மோடிக்கு எதிரானவர்களாக இருந்த இஸ்லாமியவாதிகள், தங்கள் வெறுப்பையும் சார்புகளையும் மறைக்க நடுநிலைமையின் ஆடைகளை அடிக்கடி அணிந்திருந்தார்கள்! இதுபோன்ற சமயங்களில்தான் அவர்களின் முகமூடிகள் கழன்று, அவர்களின் உண்மையான விரோத மனப் போக்கை உலகுக்குக் காட்டிக் கொடுக்கிறது.
“லிபர்ல் செக்குலர்” வகையைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் மோடிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது மகிழ்ச்சி அடைவது புதிததல்ல..! முன்னாள் என்டிடிவி ஊடகவியலாளர் சுனேத்ரா சவுத்ரி 2009 இல் நரேந்திர மோடிக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பதாக தெரியவந்தபோது, மகிழ்ச்சி தெரிவித்து ட்வீட்டியிருந்தார்.
தி குயின்ட்டுடன் தொடர்புடைய ஒரு ஊடகவியலாளர் சுப்ரதீக் சாட்டர்ஜி, பிரதமர் மோடி மரணத்துக்கு ஒரு வருடத்துக்கு நெருக்கமாக இருக்கிறார் என்று தாம் அறிந்ததில் மகிழ்ச்சி அடைவதாக ட்வீட் செய்திருந்தார். தற்செயலாக, அவர் ட்வீட் செய்தபோது பிரதமரின் பிறந்த நாள் கடந்துவிட்டிருந்தது! இந்த மோடி வெறுப்பாளர், அமெரிக்காவில் இருந்த போது, மோடியின் இறப்பைப் பார்க்கும் விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவரது தொடர்ச்சியான டிவீட்கள் அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் என்று அறிந்த தி குவிண்ட், அவரிடம் இருந்து தங்களைப்பிரித்துக் கொண்டு ஒதுங்கியது.
டைம்ஸ் நவ் பத்திரிகையாளர் ஒருவர் கூட, மோடி படுகொலை செய்யப்படும் நாளுக்காகக் காத்திருப்பதாக கருத்திட்டார். தி குயின்ட்-டில் எழுதும் கட்டுரையாளர் ஒருவர், மோடியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்
இப்படி மோடி வெறுப்பு என்பதன் உச்சம், லிபரல்கள் என்றும், மதசார்பற்றவர்கள் என்றும் தங்களைக் கூறிக் கொள்ளும் இடதுசாரி சிந்தனையாளர்களால் படுகொலைக்கான ஆசை வரை அவர்களை இட்டுச் சென்றிருக்கிறது. இப்போது அதே இடதுசாரி சிந்தனையுடன் கலந்த அதே நேரம், இஸ்லாமியவாதியாகவும் திகழும் எஸ்.ஒய்.குரைஷியின் இந்த அறுவெறுக்கத்தக்க எண்ணங்கள், அப்துல் கலாம் போன்ற தேசப்பற்று மிக்க ஓர் இஸ்லாமியரை ஆதரித்து உச்சத்தில் வைத்த இந்து பெரும்பான்மை நாட்டினரிடம் அச்சத்தையும் வருத்தத்தையும் வெறுப்பையுமே தோற்றுவித்துள்ளது.
குரைஷியின் இந்த டிவீட் குறித்து பலரும் தங்கள் ஆட்சேபத்தை எழுப்பினர். டிவிட்டர் பதிவுகளில் அவருக்கு தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். இந்த நிலையில், தனது வெறுக்கத்தக்க நடத்தைக்காக குரைஷி தனது ரீட்வீட்டை டெலிட் செய்ததுடன், வெறுக்கத்தக்க ட்வீட்டை ‘தவறுதலாக’ ரீட்வீட் செய்ததாகவும், கைதவறி பட்டன் பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.