மார்ச் 22ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மார்ச் 22ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழிசை சௌந்தராஜன் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளார். 9 மற்றும் 12 வரையிலான வகுப்புகள் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் இயங்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு பின்னர் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.