ரூ.2 ஆயிரம் நோட்டு தட்டுப்பாடு ஏன்?; ஏதோ சதி நடக்கிறது: சிவராஜ் சிங் சௌஹான்

2000rupeenote - 2026

புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எல்லாம் எங்கே போயின? இதில் ஏதோ சதி நடப்பது போல் தோன்றுகிறது என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் கூறியுள்ளார்.

ஷாஜாபூரில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்ட சிவராஜ் சிங் சௌஹான், “உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட நடவடிக்கைக்கு முன் ரூ.15 லட்சம் கோடி பணம் நம் நாட்டில் புழக்கத்தில் இருந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், புழக்கத்தில் இருந்தது ரூ.16.5 லட்சம் கோடியாக அதிகரித்தது. ஆனால், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தற்போது அதிகம் பார்க்க முடிவதில்லை. ஏடிஎம்.,கள் பல பணம் இல்லாமல் பூட்டிக் கிடக்கின்றன.

பணம் புழக்கத்தில் இல்லாததால் ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதில் ஏதோ சதி இருக்கிறது. ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட ரூ.2000 நோட்டுகள் எல்லாம் எங்கே போயின. பணத்தை பதுக்குபவர்கள் யார்? அவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசிடம் பேசி பணத் தட்டுப்பாட்டை போக்க முயற்சி செய்வேன்” என்று பேசினார்.

இதனிடையே, ரிசர்வ் வங்கி போதிய அளவுக்கு ரூ.2,000 நோட்டுகளை அனுப்பாததால் வங்கிகளில் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது” என்று, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலர் தாமஸ் பிராங்கோ தெரிவித்துள்ளார்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், வங்கிகளின் வாராக் கடன் ஒன்பது லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதில் 88 சதவீதம் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்றவை. அந்தக் கடனை வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாராக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை இந்தியப் பொருளாதாரம் மற்றும் நிதி நிலையைஆபத்துக்கு அழைத்துச் செல்வதுபோல் உள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழு வாராக் கடன் குறித்து கடந்த 2016 பிப்ரவரியில் கொடுத்த பரிந்துரைகளை, உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

ரிசர்வ் வங்கி போதுமான அளவுக்கு, ரூ 2ஆயிரம் நோட்டுகளை விநியோகிக்கவில்லை. இதனால் வங்கிகளுக்கு பண விநியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் இருந்து எடுத்துள்ள ரூ.2,000 நோட்டுகளை வாடிக்கையாளர்கள் பலர் வீடுகளில் பத்திரப்படுத்தி விடுகின்றனர். இப்படி பணத்தைப் பதுக்குவதால், மேலும் தட்டுப்பாடு நிலவுகிறது. வாடிக்கையாளர்கள் இவ்வாறு பணத்தைப் பதுக்குவது, வங்கிகள் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கிறது” என்று கூறினார்.

முன்னதாக, ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் வாபஸ் பெறப்பட்டுவிடும் என்று ஒரு வதந்தியை சமூக வலைத்தளங்களில் விஷமிகள் சிலர் பரப்பி விட்டனர். தொடர்ந்து, இனி ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வெளியிடப்படாது என்று ஒரு கருத்தைப் பரப்பினர் என்பது குறிப்பிடத் தக்கது.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories