December 5, 2025, 5:57 PM
27.9 C
Chennai

ரூ.2 ஆயிரம் நோட்டு தட்டுப்பாடு ஏன்?; ஏதோ சதி நடக்கிறது: சிவராஜ் சிங் சௌஹான்

2000rupeenote - 2025

புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எல்லாம் எங்கே போயின? இதில் ஏதோ சதி நடப்பது போல் தோன்றுகிறது என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் கூறியுள்ளார்.

ஷாஜாபூரில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்ட சிவராஜ் சிங் சௌஹான், “உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட நடவடிக்கைக்கு முன் ரூ.15 லட்சம் கோடி பணம் நம் நாட்டில் புழக்கத்தில் இருந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், புழக்கத்தில் இருந்தது ரூ.16.5 லட்சம் கோடியாக அதிகரித்தது. ஆனால், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தற்போது அதிகம் பார்க்க முடிவதில்லை. ஏடிஎம்.,கள் பல பணம் இல்லாமல் பூட்டிக் கிடக்கின்றன.

பணம் புழக்கத்தில் இல்லாததால் ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதில் ஏதோ சதி இருக்கிறது. ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட ரூ.2000 நோட்டுகள் எல்லாம் எங்கே போயின. பணத்தை பதுக்குபவர்கள் யார்? அவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசிடம் பேசி பணத் தட்டுப்பாட்டை போக்க முயற்சி செய்வேன்” என்று பேசினார்.

இதனிடையே, ரிசர்வ் வங்கி போதிய அளவுக்கு ரூ.2,000 நோட்டுகளை அனுப்பாததால் வங்கிகளில் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது” என்று, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலர் தாமஸ் பிராங்கோ தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், வங்கிகளின் வாராக் கடன் ஒன்பது லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதில் 88 சதவீதம் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்றவை. அந்தக் கடனை வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாராக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை இந்தியப் பொருளாதாரம் மற்றும் நிதி நிலையைஆபத்துக்கு அழைத்துச் செல்வதுபோல் உள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழு வாராக் கடன் குறித்து கடந்த 2016 பிப்ரவரியில் கொடுத்த பரிந்துரைகளை, உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

ரிசர்வ் வங்கி போதுமான அளவுக்கு, ரூ 2ஆயிரம் நோட்டுகளை விநியோகிக்கவில்லை. இதனால் வங்கிகளுக்கு பண விநியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் இருந்து எடுத்துள்ள ரூ.2,000 நோட்டுகளை வாடிக்கையாளர்கள் பலர் வீடுகளில் பத்திரப்படுத்தி விடுகின்றனர். இப்படி பணத்தைப் பதுக்குவதால், மேலும் தட்டுப்பாடு நிலவுகிறது. வாடிக்கையாளர்கள் இவ்வாறு பணத்தைப் பதுக்குவது, வங்கிகள் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கிறது” என்று கூறினார்.

முன்னதாக, ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் வாபஸ் பெறப்பட்டுவிடும் என்று ஒரு வதந்தியை சமூக வலைத்தளங்களில் விஷமிகள் சிலர் பரப்பி விட்டனர். தொடர்ந்து, இனி ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வெளியிடப்படாது என்று ஒரு கருத்தைப் பரப்பினர் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories