கர்நாடகாவில் ஆட்சியமைப்பதில் கருத்து வேறுபாடுகள்: மிரட்டலைத் தொடங்கி வைத்த டி.கே.சிவகுமார்

dk shivakumar kumaraswamy - 2026

கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் மற்றும் மஜத., இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் அதை சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் புதிதாக அமையவுள்ள ஆட்சியில், துணை முதல்வர் பதவிக்கு குறி வைத்துள்ள காங்கிரஸ் கட்சியின் டி.கே.சிவக்குமார், தமது ஓயாத ஒழியாத அரும் பணிக்காக மேலிடம் தனக்கு நியாயமான பதவியை வழங்கும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் மாநில புதிய முதலமைச்சராக வரும் புதன்கிழமை குமாரசாமி பதவியேற்கவுள்ளார். அவரது பதவியேற்பு விழாவுக்காக பெங்களூரில் உள்ள கண்டீரவா மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், குமாரசாமியுடன் துணை முதல்வராக பரமேஸ்வரா பதவி ஏற்க உள்ளதாகக் கூறப்பட்டது. மேலும் அமைச்சரவையில், மஜத., காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து இடம் பெறுவர் என்றும், முக்கியத் துறைகளை காங்கிரஸ் பெறும் என்றும் கூறப்பட்டது. ஆனால், இந்தத் தகவல்களை மறுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.சிவக்குமார், வரும் புதன்கிழமை குமாரசாமி மட்டுமே முதல்வர் பதவியை ஏற்க உள்ளதாகக் கூறினார்.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

மேலும், பதவி ஏற்ற ஒரு நாளில் தாம் பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளதாக குமாரசாமி கூறியிருக்கிறார் என்றும், எனவே, அவர் வியாழக்கிழமையே பெரும்பான்மையை நிரூபிப்பார் என்றும், அதன்பின்னரே அமைச்சர்கள் பொறுப்பேற்பார்கள் என்றும் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் டிகே.சிவகுமாரிடம் கேள்விகளைக் கேட்டனர். அப்போது அவர் இவ்வாறு கூறினார். மேலும், துணை முதலமைச்சராக நீங்கள் பதவி ஏற்பீர்கள் என்று கூறப்படுகிறதே, அதுகுறித்து நடவடிக்கைகள் எந்த அளவில் உள்ளது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், கர்நாடக அரசியலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைய நான் செய்த பணிக்காக, மேலிடம் நியாயமான முடிவை எடுத்து, எனக்கு நீதி வழங்கும் என நான் நம்புகிறேன் என்றார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கூவத்தூர் பாணியில் கட்டுக்கோப்பாகப் பாதுகாத்து வைத்திருந்து, எடியூரப்பா தரப்பு அணுகவிடாமல் செய்தவர் டி.கே.சிவக்குமார் என்றும், அவரது விசுவாசத்துக்கு பரிசாக, துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், பரமேஸ்வராவும் துணை முதல்வர் பதவிக்கு அடிபோடுவதால், கர்நாடகாவில் விநோதமாக இரண்டு துணை முதலமைச்சர்கள் பதவி ஏற்கக் கூடும் என்று ஒரு செய்தி உலா வந்தது. இந்த நிலையில், துணை முதலமைச்சர் பதவி தமக்கே வழங்கப் பட வேண்டும் என்பதை மறைமுகமாக செய்தியாளர்கள் மூலம் மேலிடத்துக்கு வலியுறுத்தி டிகேஎஸ் ஒரு தகவலைப் பதிய வைத்தார்.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிகேஎஸ்., இரு கட்சிகளிடையேயும் கருத்து வேறுபாடுகள் உள்ளன என்றும் அவை குறித்து பேசித் தீர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

#Karnataka #Congress #BJP #JDS

1 COMMENT

  1. மனச்சாட்சியே இல்லாமல் வெட்கம் துளிகூட இல்லாமல் தேர்தலுக்கு முன் ஒருவருக்கு ஒருவர் பரம எதிரியாக பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றி ஆட்சியை இழந்த காங்கிரஸ் 78 முன்பு சரக்கு இல்லாமல் ஆட்சியை இழந்த மஜத 38 மட்டுமே பெற்றுவிட்டு பதவிக்கு மட்டுமே ஆசைப் பட்டு கூட்டு சேர்ந்து பெரும்பான்மை மக்கள் விரும்பிய பாஜக வை ஆளவிடாமல் தடுத்து மிகப்பெரிய பாவத்தை செய்ததால் தண்டனை கிடைத்தே தீரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories