December 6, 2025, 12:19 AM
26 C
Chennai

பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க கேரளா எதிர்ப்பு: உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதில் தமிழக அதிகாரிகள் உறுதி

04 July20 Mullai periyaar - 2025பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்காமல், தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்ற கேரள அதிகாரிகளின் கோரிக்கையை தமிழக அதிகாரிகள் நிராகரித்தனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடி தண்ணீர் தேக்கப்படும் என உறுதியாகத் தெரிவித்தனர்.

முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் இரவு 134 அடியை எட்டியது. நீர்வரத்து வினாடிக்கு 4,670 கன அடியாக இருந்தது. இதனால் அணையில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையில் 5,539 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று காலை முதலே மழை பெய்தது. இதனால் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும்.

பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை நெருங்கி வருவதால், மத்திய நீர்வள ஆணைய செயற் பொறியாளர் ராஜேஷ் தலைமையிலான துணை கண்காணிப்புக் குழுவினர் அணையில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.

பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து இதே நிலையில் இருந்தால் நாளை நீர்மட்டம் 136 அடியை எட்டிவிடும். ஒருமுறை பலத்த மழை பெய்தாலும் நீர்மட்டம் 142 அடியை எட்டிவிடும். பின்னர், பலத்த மழை பெய்து வரும் கேரளாவுக்கு தண்ணீரை வீணாக திறக்க வேண்டியிருக்கும். இதனால் அதிகாரிகள் நேற்று முதலே வினாடிக்கு 2,300 கனஅடி தண்ணீரை திறந்துள்ளனர். 4 ராட்சதக் குழாய்கள் வழியாக தலா 400 கனஅடி வீதம் 1,600 கனஅடி மட்டுமே திறப்பது வழக்கம். இந்த தண்ணீரில் இருந்துதான் லோயர் கேம்பில் மின்சாரம் தயாரிக்கப்படும்.

இத்துடன் இரைச்சல் பாலம் வழியாக 700 கனஅடி கூடுதலாக திறந்து, வைகை அணையில் சேமிக்கப்படுகிறது. கேரள பகுதிக்கு தண்ணீர் திறப்பதை தவிர்க்கும்போது மட்டுமே இரைச்சல் பாலத்தில் தண்ணீர் திறக்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories